கவியரசன் வானத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு வாய்விட்டு கேட்டதெல்லாம், "இறைவா! இந்த ஏழைகளை வாழவிடு!" என்பதே!
மனிதன் கடவுளிடம் கேட்கலாம், அதை கொடுப்பதும், எத்தனை என்பதும், எப்போது என்பதும், அவனுக்கே வெளிச்சம்!
தமிழரசியின் சுபாவம், தோல்வியை சுலபத்தில் ஏற்கமாட்டாள். இறுதிவரை போராடுகிற பிறவிக்குணம்!
மீண்டும் வீட்டு ஓனர்களின் கூட்டத்தை கூட்டி, பிரமாதமான பிரசங்கம் ஒன்று செய்தாள்!
"வேலைக்காரிகள் தங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்ததற்கு அவர்கள் சங்கம் அமைத்ததே காரணம், இல்லையென்றால், கிடைத்திருக்காது, என்று இனி சங்கம் சொல்வதைத்தான் கேட்பார்கள், சம்பளம் தருகிற நம்மை மதிக்கமாட்டார்கள். அதுமட்டுமா? தீபாவளி போனஸ், ஓவர்டைம், வருடாந்திர இன்க்ரிமெண்ட் எல்லாம் கேட்பார்கள். கொடுக்காவிட்டால் ஸ்ட்ரைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
மீது நம்பிக்கை, எனக்கு என் ஏழை மக்களின் தூய்மையான எண்ணங்களின்மீதும் தர்மத்தின்மீதும் நம்பிக்கை! யாராவது ஒருவருக்கு துன்பம் வந்தாலும், மீண்டும் சங்கம் எழும், அவர்களின் சூது விழும்!"
கவியரசன் அவன் நம்பிக்கையை பகிர்ந்துகொண்டான்!
{kunena_discuss:785}