சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்
கண் விழிகளை திறக்க முயற்சிக்கும் பிஞ்சு விரலின் தீண்டலின் சுகத்தில் தன்னை மறந்தாள்... கால் பாதங்கள் கொண்டு நெஞ்சில் உதைக்க மனம் பஞ்சாய் பறந்தது அவளுக்கு ... கைவிரல் பிடித்து தன் விரல் கோர்த்து தன் பொக்கை வாய் காட்டி சிரிக்கையில் கிடைத்த மகிழ்ச்சியில் சுற்றத்தை மறந்து உவகை அடைந்தாள்.... நெஞ்சில் சாய்ந்து கொண்டு பாஷையின்றி கண்களால் பேசும் குழந்தையின் கன்னம் தீண்டுகையில் கிடைத்த அமைதியில் உலகை மறந்து தனிஉலகில் சஞ்சரித்தாள்.
அத்தகைய சுகமான அனுபவங்களை அமைதியாக ரசித்து அனுபவித்து குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த ரஷிதாவிற்கு அலைபேசியில் அழைப்பிற்கான அறிகுறியாக மென்மையான காதல் பாடல் கானம் இசைக்க விழி விரித்து பார்த்தவளின் கைத்தீண்டலில் தொலைவில் விழுந்து தொல்லை மறந்து கண்மூடியது அலைபேசி....
ஓரிரு விநாடிகள் மெளனத்தில் கலைய மணி 10 என்பதை உணர்த்த அழகாய் சினுங்கிய சுவர் கடிகாரம் பெண்ணவளின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் தன் வேலையை பாதியிலேயே நிறுத்தி வீடெங்கும் சுள்ளிகளாய் சிதறியது...
அறையில் நிலவிய அமானுஷ்ய அமைதியை கிளித்து வெளிப்பட்டது பெண்ணவளின் அழுகை.... தலையை சுவற்றில் மோதிக் கொண்டு பூட்டிய வீட்டுக்குள் கதறியவளின் சத்தம் அவளுக்கே திரும்ப கேட்டதே ஒழிய அவள் குரல் அறிய அருகில் யாருமே இல்லை... இவ்வளவு நேரம் கண்டதும் கனவு என்பதை அறிந்ததும் என் குழந்தை என் குழந்தை அழுது அரற்றி முடித்து தரையில் வீழ்ந்தவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது....
5வருடங்களுக்கு முன்.... இதே நாள்... ஏறக்குறைய இதே மணித்துளிகள்.....
ரஷி..... டைம் ஆச்சு கிளம்பிட்டியா என்று கேட்டவனின் முன்னால் வந்து நின்றவள் "என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்றாள்....
என்ன முடிவுமா என்று கேட்ட ரஞ்சிதத்திடம், அத்தை நான் இப்போ குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை... இன்னும் 2வருஷம் வேலை செய்து ஓரளவு வசதியான பிறகு தான் குழந்தையை பற்றி யோசிக்க போறேன். அதனால் இன்னைக்கு டாக்டர் கிட்ட போய் கருக்கலைப்பு செய்துகலாம் என்று இருக்கிறேன் என்று சாதாரணமாக கூறியவளின் வார்த்தையை தாங்க முடியாமல் தரையிலே அமர்ந்து விட்டாள் ரஞ்சிதம்....
ரஷி.... நான் சொல்றத கேளு.... பணம் எப்ப வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அதற்காக கருவாகி இருக்கிற குழந்தையை அழித்து பாவத்தை சம்பாதிக்க வேண்டாம் என்றான் அவளை