மூலம் கருப்பையை நீக்கி விட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்... மாமியார் கணவர் நாத்தனார் என யாரும் பழைய நிகழ்வுகளை கூறவில்லை... அன்போடு தான் கவனித்து கொண்டார்கள் எனினும் ரஷிதாவால் இயல்பாக இருக்க முடியவில்லை... இரண்டு மாதத்தில் திடீரென ரஞ்சிதமும் மரித்துவிட குடும்பமே களையிழந்து விட்டது... ஜீவா எல்லா நிகழ்வுகளையும் மனதில் புதைத்து கொண்டான். ரஷிதா குழந்தை ஏக்கத்தில் திடீரென கோபப்பட்டாள். ஜீவாவிடம் ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தாள். மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் எதுவும் சரியாகாத நிலையில் வேலையின் நிமித்தம் ஜீவா பாரினுக்கு சென்று விட்டான். தனிமையில் ஒவ்வொரு நாளும் கடினமாக கழிந்தது ரஷிதாவிற்கு....
பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவள் தலையணையை கட்டிக் கொண்டு அழுதாள்... அவளது மன பாரங்களை தலையணையாவது பகிர்ந்து கொள்ளட்டும்....
சில நன்மைகள் வரமாய் வந்து சேர்கிறது...
சிறிதும் தாமதமின்றி சொந்தமாக்கிட வேண்டும்....
அன்பும் பாசமும் அவ்வாறு தான்....
தேடி வரும் போது அணைத்திட வேண்டும்
தொலைத்து விட்டு தேடினால்
தேடி தேடி தொலைந்து தான் போக வேண்டும்...
கிடைத்திட்ட உறவுகளை உயிராய் நேசிப்போம்
காத்திருக்கும் உறவுகளை வரமாய் சுவாசிப்போம்....