காதலித்து மணந்து கொண்ட ஜீவா....
பிறக்கிறது பெண் குழந்தைனா அதற்கு சீர் நகை செய்ய பணம் வேண்டாமா... குழந்தை இளவரசி மாதிரி சந்தோஷமா இருக்கனும்... பணம் இல்லனா கட்டிக்கிறதுக்கு யார் வருவா சொல்லுங்க....
ரஷிதா.... நான் உங்கிட்ட கல்யாணம் பண்ண நகை பணம் னு எதாவது கேட்டனா? அதேமாதிரி என் பொண்ண கட்டிக்க ஒருத்தன் பிறந்திருப்பான்.... அது மட்டுமல்ல இப்போ வயிற்றில் உருவாகி இருப்பது ஆணா பெண்ணா னு தெரியாது இப்பவே எதையோ நினைத்து ஏன் உன்னை குழப்பிக்கிற என்றவனின் மனதை போலவே வார்த்தைகளும் வேதனையாக வெளியேறியது....
இதப்பாருங்க நான் என் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று கூறி விட்டு வேகமாக வெளியேறினவள் தான் சொன்னது போலவே கருக்கலைப்பு செய்து விட்டு தன் தாயுடன் வீட்டிற்கு வந்தவளை பார்த்தவனின் கண்களில் கோபம் ஆற்றாமை ஆதங்கம் ஏமாற்றம் போன்ற பல உணர்வுகள் மாறி மாறி தோன்றி மறைந்ததோடு அவனும் அறைக்குள் சென்று மறைந்தான்....
மாதங்கள் சில ஓடியதும் மீண்டும் இயல்பு நிலை திரும்பியிருந்தது வீட்டில்....
ரக்ஷிதா மனது மட்டும் குழந்தையை பற்றி எண்ண தொடங்கியிருந்தது... ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது... ஜீவா பதவி உயர்வுடன் லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கினான்... இந்த நிலையில் ரக்ஷிதா குழந்தையை பற்றிய பேச்சு எடுத்தாள். ஆனால் ஜீவா அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை... ஆனால் அவளிடம் பாசமாக தான் நடந்து கொண்டான்.... நாளாக நாளாக குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் மனதில் எழுந்தது...
திடிரென்று ஒருநாள் பயங்கரமான வயிற்று வலியால் அவதிப்பட்டாள் ரக்ஷிதா... மாதாந்திர பிரச்சனையால் அப்படி இருக்கும். கசாயம் குடித்தால் கேட்கும் என்று அவளை அக்கறையாக பார்த்து கொண்டார் அத்தை ரஞ்சிதம்... நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் கஷ்டப்படுவதைக் கண்ட ஜீவா டாக்டரிடம் அழைத்துச் சென்றான். பரிசோதித்த டாக்டர் ஸ்கேன் செய்து பார்க்க அறிவுறுத்தினார்.... பத்து நாட்கள் கடந்த நிலையில் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து டாக்டர் முதல் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்... ரக்ஷிதா மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்....
ரிப்போர்ட்டில் கருப்பையில் கட்டி இருப்பது தெரிய வந்தது... கருப்பையை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று டாக்டர் கூறி விட்ட நிலையில் ஒரு வாரத்தில் ஆப்பரேஷன்