மாலை 5:35 மணி. பேனா எடுத்து கையெழுத்திட ஆரம்பிதேன்!
சுழித்து R .....எழுதும்போதே மனதில் ஒரு பதட்டம்.
சுதாரித்து, a....m....e....s...h என்று நேர்கோட்டில் எழுதும் முன்பே....அம்மா மண்டைக்குள் கிசுகிசுத்தாள்.
'மூன்று புள்ளி ஒரு smiely ' என்றாள்.
மூன்று புள்ளி....ஒரு smiely போட்டு முடித்த போது..
என் கண்ணில் இருந்து விழுந்த நீர்த்துளி....
மூன்றாவது புள்ளியை கரைக்க ஆரம்பித்து இருந்தது!
'சார்! sign பண்ணிட்டா papers தறீங்களா ப்ளீஸ்!' என்ற செவிலியின் குரலால்.... நினைவுகளிலிருந்து கலைந்தேன்.
என்னிடம் இருந்து தாள்களை வாங்கிக்கொண்டு
அவசர பிரிவினுள் விரைந்தாள்!
கண்ணாடி வேலைப்பாட்டுடன் இருந்த அவசர பிரிவின் உட்புறத்தை....வெளியிலிருந்தே பார்வையிட்டேன்.
என் கையெழுத்தை உறுதி செய்த டாக்டர், மற்ற செவிலியர்களுக்கு கட்டளையிட....
அதுவரை.....என் தாயின் ஜீவனை தாங்கிக் கொண்டிருந்த....செயற்கை ஆக்ஸிஜன் குழாய் மெதுவாய் நிறுத்தப்பட்டது.
முடிவில்லா என் கையெழுத்து.....
ஒரு முடிவுக்கு.....
கையொப்பமானது!