சிறுகதை - கையெழுத்து..! - பிரபு ராம்
வீட்டு பால்கனி ஊஞ்சலில்... அப்பா அந்த வார அரசியில் நாளிதழை புரட்டி கொண்டிருந்தார் .
நான் கீழே அமர்ந்து.... வெற்று காகிதத்தில் கிறுக்கிக்கொண்டிருந்தேன். மாலை தென்றல் நான் எழுதும் காகிதத்தை கலைத்துக் கொண்டிருந்தது.
'இந்தாங்க காபி☕️' - அப்பாவிடம் கோப்பையை தந்துவிட்டு அம்மா என் அருகில் அமர்ந்தாள் .
'என்ன செய்யற ? இத்தனை பேப்பர் வேஸ்ட் பண்ணி?' - அம்மா
'என்னோட Signature ...' பெருமையாய் கிறுக்கியவை எல்லாம் காண்பித்தேன்.
'உங்க அப்பா கிட்ட கேட்க வேண்டியது தானே! சின்ன வயசுல உங்க தாத்தா கையெழுத்தையே இவர் தான் சூப்பரா போடுவாராம்' - நமுட்டு சிரிப்பு உதிர்த்தாள் 😋.
புத்தகத்தை படித்தவாரே வயிறு குலுங்க சிரித்தார் அப்பா .
'அப்பா ஐடியா கொடுங்கப்பா '- கெஞ்சலாய் நான் !
'கையெழுத்துல நிறைய ஸ்டைல் இருக்கு.
முழு பேரும் எழுதுற sign !
Initials letters மட்டும் வெச்சு sign !
முதல் letter யும்...கடைசி letter மட்டும் தெரியற sign !
மேல் நோக்கிய sign !
கீழ் நோக்கிய sign ! இப்படி...!'
மீண்டும் தொடர்ந்தார்.
' எந்த ஸ்டைல் விட ரொம்ப முக்கியம்...எது உனக்கு சுலபமாவும் ...சௌகரியமாவும் வரும்னு பார்க்கணும். ஏன்னா! கையெழுத்து எப்பவும் ஒரே மாதிரி எல்லா நேரமும் இருக்கணும்.'
' கையெழுத்துனால...வாழ்க்கையை இழந்தவங்களும் உண்டு! மீட்டவங்களும் உண்டு !
நீ வேணும்னா எங்க அம்மா கையெழுத்து ட்ரை பண்ணேன்?!' - அப்பா முடித்தார்
' எது?! எழுதறதுக்கும்...கையெழுத்துக்கும் வித்தியாசமில்லாம இருக்குமே...அதுவா?! - நக்கலாய் சிரித்துகொண்டே அம்மா அப்பாவிடம் 'பல்பு...பல்பு..' என்றாள். இது மற்றவர்களை கிண்டல் செய்யும் எங்களுக்கான அடைமொழி.
அப்பா சிரித்தவரே மீண்டும் புத்தகத்தை புரட்டினார்.
அம்மா.... நான் அதுவரை முயற்சித்த கையெழுத்தை ஒவ்வொன்றாய் பார்த்தவள்...ஆலோசனைகளை பரிமாறினாள்.