(Reading time: 5 - 10 minutes)

என் வங்கி கணக்கு விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்துகொண்ட யாரோ, என் சேமிப்பில் இருந்த அத்தனை பணத்தையும் களவாடிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, நான் புதிதாக துவங்கியிருக்கிற வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை தந்திருக்கிறேன். உடனடியாக அதற்கு இரண்டு லட்ச ரூபாய் அனுப்பிவைக்கவும். இந்தியாவிலுள்ள என் லட்சக்கணக்கான முதலீடுகளிலிருந்து கடன் பெற்று தங்களுக்கு ஒரு வாரத்தில் அந்தப் பணத்தை திருப்பிவிடுகிறேன். தங்களைத் தவிர, எனக்கு உதவ வேறு யாரும் இல்லை, ப்ளீஸ்!"

 வருங்கால மனைவியின் துயர் துடைக்க, சுகுமாரன் அடுத்த கணமே, ஆன்லைனில் இரண்டு லட்ச ரூபாய் பேங்க் டிரான்ஸ்பர் செய்தார்.

 " தாங்கள் என்னைக் காப்பாற்ற, செய்துள்ள இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் தங்கள் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன், உத்தமி!"

 நமக்கெல்லாம் ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள்! உத்தமிக்கு அப்படியில்லை போலும்!

 சுகுமாரன் பத்து நாட்களுக்குப் பிறகு உத்தமிக்கு அனுப்பிய செய்திக்கும் அதன்பிறகு இன்றுவரை அனுப்பியவைகளுக்கும் உத்தமியிடமிருந்து பதிலே இல்லை என்பதோடு, அவளுக்கு இரண்டு லட்ச ரூபாய் பேங்க் டிரான்ஸ்பர் கணக்கும் மூடப்பட்டுவிட்டதென தகவல் கிடைத்தது!

 உத்தமிக்கு பொருத்தமான பெயரெனப் புகழ்ந்த சுகுமாரன் பாவம்! இன்னமும் உத்தமிக்காக காத்திருக்கிறார். சத்யமேவ ஜெயதே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.