ஜாலியா இரு!"
என்று எனக்கு ஆறுதல் கூறிக்கொண்டே, நீ ஏம்மா கண்ணீர் சிந்தினாய்?
உனக்கும் என் பிரிவு வலித்தது, இல்லையா?
அம்மா! பிள்ளைக்கு எத்தனை வயதானாலும், தாய்க்கு அவன் குழந்தைதான்!
அதேபோல, பிள்ளைகளுக்கும் எத்தனை வயதானாலும், அம்மாவின் நினைப்பு தருகின்ற சுகத்தை நிச்சயமாக, மனைவியால் தர முடியாது!
இது என் அனுபவம் மட்டுமல்ல, என் மனைவியும் இதையே சொல்வாள்.
அவளுக்கும் அவள் தாயின் நினைவு வரும்! அப்போதெல்லாம், அவள் என்னிடம் தான் தன் நினைவுகளை, பகிர்வாள்.
ஒவ்வொரு தாயும் தான் பெற்ற குழந்தையை பாசத்தைக் கொட்டி வளர்க்கிற நேர்த்தியை கண்டு அவளை தெய்வமாக போற்றி துதிக்க விழைகிறது, மனம்!
தாய் என்கிற உறவுக்கு தனி மதிப்பு உள்ளதால்தான், தாய்மொழி, தாய்நாடு, தாய்வீடு, 'தாயைப்போல்பிள்ளை, நூலைப்போல் சேலை', என்றெல்லாம் புகழ்கிறோம்!
கவிஞன் பாரதி, தெய்வத்தை தாய்வடிவில்தான் கண்டான்.
'ஓம் சக்தி' என தெய்வத்தை சக்தி வடிவில் வணங்கினான்.
'தாயிற் சிறந்த கோயிலுமில்லை....' என பழ மொழி உண்டே!
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்கிறோம்.
வரிசைப்படுத்துகையில் 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என தாயை முன் நிறுத்திச் சொல்கிறோம்.
அம்மா! ஒருமுறை, என் சிறுகதையை படித்துவிட்டு, என்னை உச்சி முகர்ந்து கூறினாய்.
" கண்ணா! உன் கதைகளில், தாயைப்பற்றி, நீ எழுதுவதை என்னால் படிக்க முடியலேடா! கண்களில் குளம் கட்டுகிறது" என்பாய்!
அம்மா! எனக்கும் உன்னைப்பற்றி எழுதும்போது, கண்கள் குளமாகின்றன!
மேலே எழுத எத்தனையோ இருந்தும், எழுதமுடியலேம்மா...........!