சிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்
ஐந்து ஆண்டுகள் நட்பை தொடர்ந்து வந்த ராகினி விக்ரோரியா என்ற பெண் இருவரும் இணையத்தில் உருவான அழகிய தோழிகள் ஆகும்.
விக்ரோரியா ராஹினிக்கு வீடியோ கோல்பண்ணி இருவரும் தங்கள் வாழ்க்கைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் எங்கே உங்கள் கணவர் என்று கேட்டாள் விக்ரோரியாவிடம்.
நல்ல நண்பிகளாக இருந்தாலும் அன்று தான் அவள் வாழ்க்கையை கூற ஆரம்பித்தால்......
ராஹினிக்கு நான்கு சகோதரிகள் நான்கு நான்கு சகோதர்களுக்கு இறுதியில் தான் என்றாள்.
அனைத்து சகோதர்களும் சகோதரிகளும் வெளிநாட்டில் தான் மட்டும் ஊரில் வசித்துக்கொண்டிருக்கையில் நகுலனும் ராகினியும் உயிராக பள்ளியில் இருந்து காதலித்து வந்தார்கள். ஆனால் ராகினிக்கு வேறு ஒரு திருமணம் நிச்சயம் செய்து வைத்த பின்னும் இருவரும் காதலித்து வந்தனர். ஒன்று சேர்வோம் என்ற நம்பிக்கையில்.
ஆனால் ராகினி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது.
வேறு ஆண்மகனுடன் திருமணம் என்று முடிவாகி நிலையில் காதலனை மறக்க வேண்டிய கட்டாய நிற்பந்தம் ஏற்பட்டது.
திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் மிகவும் ஒரு வேதணைக்குரிய நிலையில் வெயில்பட்ட புழு போல காதலித்த இரு மனங்கள் துடிக்க.....
நகுலன் மனமேடையின் முன் ராகினி மணவறையில் நிச்சயிக்க பட்ட ஆண் மகனுடன் பெற்றோரின் விருப்பத்தில் திருமணம் செய்தாள்.
இனி வாழ்க்கை இன்னொருவனுடன் மாறி விட்டது என்று. வேறு வழியின்றி மனதை கல்லாக்கியவளிற்கு மறுபடியும் ஒரு துர்ப்பந்தமான நிலை ஏற்பட்டது.
திருமணம் செய்து விட்டு தன்னை கூப்பிடுவதாக சொல்லி விட்டு வெளிநாட்டு சென்ற கணவன் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவளை கூப்பிட வில்லை.
அயலவற்களின் அவ சொல்லுங்கள் ஆளாகி தை அறிந்த ராகினியின் தமயன் தன் முயற்சியினால் அவள் வாழ்க்கையை காப்பாற்ற முடிவெடுத்து பல இன்னல்களுக்கு மத்தியில் ராகினியை வெளிநாட்டில் கூப்பிட்டு விட்டார். ராகினியும் தானும் தன் வேலை என்று வாழ்ந்து கொண்டிருக்கையில் ராகினியின்... கணவரின் தம்பி அவளை சந்தித்து தன் தம்பி திருந்தி விடுவான்.. அவனை ஏற்றுக் கொள்ளுங்கள்... என்றது மட்டும் அல்ல.
ஊற்றார் உறவினர்களும் அவனை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினர்.
ராகினி அவர்களிடம் பணிவாக கேட்டாள்.
என் வாழ்க்கை இதுவரை அழிந்தது போதும் என்று சொன்னால் ஆனால் உறவுகள் விடுவதாக