(Reading time: 7 - 13 minutes)

கடையை பார்த்துக்கிறேன்....."

" மாப்ளே! சீக்கிரத்திலே என் மகளையும் உனக்கு கட்டிவச்சிடறேன், மாப்ளே! நீ என் தங்கச்சி மகனில்லே, என் மூத்த மகன்!"

சிவா, மறுநாள் முதல் வேலையா, பத்மாவை நேரில் சந்தித்து, காலைத் தொட்டு வணங்கினான்.

" என்னாச்சு, சிவா?"

" அக்கா! நான் முதலாளி ஆயிட்டேன்! உங்க வாக்கு பலிச்சிடுச்சு! மேனேஜருக்கும் நன்றி சொல்லிடறேன்!"

நடந்ததை விவரமாகத் தெரிவித்தான்.

" அக்கா! எப்படி அவ்வளவு கரெக்டா சொன்னீங்கன்னு ஆச்சரியம் தாங்கமுடியாமத்தான், ஓடி வந்தேன்...."

" சிவா! ஒண்ணு, எப்பவும் பாசிடிவா சிந்திக்கச் சொல்லியிருக்காங்க, நம்ம பெரியவங்க! ரெண்டாவது, புத்தர் சொல்லியிருக்கிறார், நாம் எதை தீவிரமாக நினைக் கிறோமோ, அதுதான் நடக்கிறது, நான் உன்னை என் தம்பியா நினைக்கிறேன், நேற்று உன் முகம் வாடியதும் என் இதயம் துடித்தது. உடனே, தீவிரமா மனசிலே வேண்டினேன், உன் சோகம் உடனே மாறி, நீ மகிழ்ச்சியில் மிதக்கணும்னு! இப்ப நீ மிதந்துவரே!"

" அக்கா! என் கண்களை திறந்து வைச்சிட்டீங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.