(Reading time: 7 - 13 minutes)

சிவா! எழுந்திரு! நேரே அந்த மேனேஜரிடம் போய் அவரை தேங்க் பண்ணு! அவராலே உனக்கு சிறந்த எதிர்காலம் அமையப் போகுது, அப்படி அமைந்ததும், அவரை மீண்டும் வந்து பார்க்கிறேன்னு சொல்லு!

இப்படி வேலை போனவங்க எத்தனையோ பேர், வாழ்க்கையிலே பெரிய மனிதர்களா வளர்ந்ததை நினைத்துப் பார்!

சிவா! உன் பேரிலேயே கடவுள் இருக்கிறார், உனக்கு நம்பிக்கை இருந்தால் உன் உள்ளேயே கடவுள் இருக்கார், சத்தியம் என்னன்னா, நீயே கடவுள்!

'அஹம் பிரும்மாஸ்மி' 'அதுவாக நீ இருக்கிறாய்' சிவா! நீ இந்த சின்ன மனிதன் இல்லே, பிரும்மாண்டம்!

வாயில்லா ஜீவன்களை, செடி, கொடி, பயிர், தாவரங்களை வாழ வைக்கிறவன் உன்னையும் வாழவைப்பான்னு நம்பு!

அவ்வப்போது, என்னை வந்து பார்! இல்லே, நான் இப்ப சொல்வதை நினைத்துக்கொள்!"

குனிந்திருந்த தலையை நிமிர்த்திய சிவாவின் கண்களில் ஒளி சுடர்விட்டது!

புதிய மனிதனாக, அவன் வெளியேறியபோது, பத்மா அவனிடமிருந்து அவன் கைபேசி எண்ணை பெற்றுக்கொண்டாள்.

அவள் இதயம் நிறைந்திருந்தது! தன்னாலும் இப்படியெல்லாம் பேச முடிந்ததே என்று பெருமை அடைந்தாள்.

சிவா, வயதில் இளையவன்! படிப்பு முடிந்து புதிதாக வேலையில் சேர்ந்து ஓராண்டுக்குள் வேலை போய் விட்டது. புதிய அனுபவம்!

நொறுங்கிப்போய் விட்டான். அவனை தட்டி எழுப்பத்தான், இத்தனை பேச்சும்!

சிவாவின் கைபேசி எண்ணை எடுத்துப் பார்த்தாள். அது ஏறுமுகத்தில் இருந்தது!

பத்மாவின் முகத்தில் பிரகாசம்! அவள் மனதில் திடுமென தோன்றிய அந்த எண்ணம். " சிவா! நீ நேரே உன் வீடு போய்ச் சேர், அங்கே உனக்கொரு அதிசயம் காத்து இருக்கு! முகத்தில் சோகத்தை துடைத்தெறிந்ததுவிட்டு, மலர்ச்சியுடன் வீட்டுக்குள் நுழை! வேலை போனதை சொல்லாதே! நாளைக்கு எனக்கு தகவல் சொல்லு!"

பத்மாவுக்கு ஆனந்தம் சற்று தூக்கலாகவே இருந்தது!

அவளுக்கு ஏன் அந்த எண்ணம் தோன்றியது? அவளுக்கே தெரியாது! மேலே உள்ளவனே அறிவான்!

சிவா, வீட்டுக்குள் நுழையும்போதே, விருந்தாளி வந்திருப்பது தெரிந்தது!

ஆம், தாய்மாமன் சிங்காரம் வந்திருந்தார். அவர், வாழ்வில் படிப்படியாக முன்னேறியவர் என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.