சிறுகதை - யார் நல்லவன்? - ரவை
" தாத்தா! நீ உயில் எழுதி வைக்கப் போறதா, அப்பா அம்மாவிடம் சொல்றாரே, 'உயில்'னா என்ன தாத்தா?"
" அது ஒண்ணுமில்லே, வெறும் பேப்பர்தான்!"
" அப்ப ஏன் அதுக்கு 'உயில்'னு பேரு?"
" அந்த வெறும் பேப்பர்ல ஒருத்தர், தனக்குப் பிற்காலம் தன் சொத்துக்கள் யாருக்கு எவ்வளவுன்னு எழுதுவாரு!"
" எதுக்கு எழுதிவைக்க அவசியம்? நேரிலேயே தந்து விடலாமே!"
" அப்படியும் செய்யலாம், ஒருத்தருக்குத் தருவதா இருந்தால்! ரெண்டு மூணு பேருக்கு தரணும்னா, யாருக்கு எவ்வளவுன்னு எழுதி வைச்சா நல்லது, குழப்பம் வராது!"
" தாத்தா! சொத்துன்னா என்ன?"
" வீடு, நிலம், பணம், வியாபாரம், இதெல்லாம்தான்"
" உனக்கு இதெல்லாம் இருக்கா, தாத்தா?"
" எல்லாம் இல்லை, வீடு கொஞ்சம் பணம் இருக்கு!"
" எல்லாத்தையும் எங்க அப்பாவுக்கு தரப்போறியா?"
" குமரா! உங்க சித்தப்பா அத்தைக்கும் தரணும்டா!"
" அவங்களை நான் இது வரையிலே பார்த்ததேயில்லையே!"
" அவங்க வேற வீடுகளிலே இருக்காங்க!"
" இந்த ஊரிலேதானே?"
" ஆமாம்! அவங்களுக்கு என்மேலே கோபம்! அதுதான் இங்கே அவங்க வரலை!"
" உன்மேலே கோபமா? நீ ரொம்ப நல்லவராச்சே!"
சிரித்தார், தாத்தா! " ஏன் சிரிக்கிறே, தாத்தா?"
" நான் நல்லவன்னு நீ நினைக்கிறே, அவங்க அப்படி நினைக்கலியே....."
" பெரியவங்க, என்னைப் போல நினைக்கமாட்டாங்க போலிருக்கே, தாத்தா!"
" நல்லதே நினைக்கிற சின்னவங்கதான் வயது ஆக ஆக, கெட்டதை நினைக்க பழகிக்கிறாங்க......"
" த்தூ! கடவுள் எவ்வளவு நல்லவரு, அவரைப் பார்த்து தெரிஞ்சிக்க வேண்டாம்?"
" குமரா! அம்மா உனக்கு ஒரு லட்டு கொடுத்தால், நீ உன் நண்பனுக்கும் அதிலே கொஞ்சம் தரணும்னு அவனை தேடி ஓடறே! ஆனா பெரியவங்க, அந்த லட்டை தான் மட்டுமே சாப்பிடணும் என்று ஒளித்து வச்சுக்குறா!"
" மரத்திலே, நிலத்திலே பழங்களை, கரும்பை கடவுள் ஒளிச்சா வைக்கறாரு, யார்