(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - யார் நல்லவன்? - ரவை

" தாத்தா! நீ உயில் எழுதி வைக்கப் போறதா, அப்பா அம்மாவிடம் சொல்றாரே, 'உயில்'னா என்ன தாத்தா?"

 " அது ஒண்ணுமில்லே, வெறும் பேப்பர்தான்!"

" அப்ப ஏன் அதுக்கு 'உயில்'னு பேரு?"

" அந்த வெறும் பேப்பர்ல ஒருத்தர், தனக்குப் பிற்காலம் தன் சொத்துக்கள் யாருக்கு எவ்வளவுன்னு எழுதுவாரு!"

  " எதுக்கு எழுதிவைக்க அவசியம்? நேரிலேயே தந்து விடலாமே!"

   " அப்படியும் செய்யலாம், ஒருத்தருக்குத் தருவதா இருந்தால்! ரெண்டு மூணு பேருக்கு தரணும்னா, யாருக்கு எவ்வளவுன்னு எழுதி வைச்சா நல்லது, குழப்பம் வராது!"

   " தாத்தா! சொத்துன்னா என்ன?"

 " வீடு, நிலம், பணம், வியாபாரம், இதெல்லாம்தான்"

  " உனக்கு இதெல்லாம் இருக்கா, தாத்தா?"

  " எல்லாம் இல்லை, வீடு கொஞ்சம் பணம் இருக்கு!"

" எல்லாத்தையும் எங்க அப்பாவுக்கு தரப்போறியா?"

" குமரா! உங்க சித்தப்பா அத்தைக்கும் தரணும்டா!"

" அவங்களை நான் இது வரையிலே பார்த்ததேயில்லையே!"

" அவங்க வேற வீடுகளிலே இருக்காங்க!"

" இந்த ஊரிலேதானே?"

" ஆமாம்! அவங்களுக்கு என்மேலே கோபம்! அதுதான் இங்கே அவங்க வரலை!"

 " உன்மேலே கோபமா? நீ ரொம்ப நல்லவராச்சே!"

 சிரித்தார், தாத்தா!    " ஏன் சிரிக்கிறே, தாத்தா?"

" நான் நல்லவன்னு நீ நினைக்கிறே, அவங்க அப்படி நினைக்கலியே....."

 " பெரியவங்க, என்னைப் போல நினைக்கமாட்டாங்க போலிருக்கே, தாத்தா!"

" நல்லதே நினைக்கிற சின்னவங்கதான் வயது ஆக ஆக, கெட்டதை நினைக்க பழகிக்கிறாங்க......"

" த்தூ! கடவுள் எவ்வளவு நல்லவரு, அவரைப் பார்த்து தெரிஞ்சிக்க வேண்டாம்?"

" குமரா! அம்மா உனக்கு ஒரு லட்டு கொடுத்தால், நீ உன் நண்பனுக்கும் அதிலே கொஞ்சம் தரணும்னு அவனை தேடி ஓடறே! ஆனா பெரியவங்க, அந்த லட்டை தான் மட்டுமே சாப்பிடணும் என்று ஒளித்து வச்சுக்குறா!"

" மரத்திலே, நிலத்திலே பழங்களை, கரும்பை கடவுள் ஒளிச்சா வைக்கறாரு, யார்

6 comments

  • Really superb one.. Murali vani nice.. thatha purinchitathu nalathu.. kumaran character nice.. rompa nala irunthathu.. super story... :clap: good night dear uncle...
  • Good evening dear Adharva! What you have said is exactly the message Intended to be conveyed through the storyline! Your analysis and review is awesome! Thank you!
  • Wow good one uncle 👏👏👏👏👏 Murali and vani are too good and practical 👍 but avanga amma irundhapave idhai puriya vaithu irukalam anyway it is not too late.....thatha than realize agitare :dance: kumaran oda innocence was :cool: let's think good and have a positive view.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.