"வாணி! நீயே சொல்லு!"
" மாமா! இந்த வீட்டை விலைக்கு வாங்கினது, நீங்க! இந்த வீட்டிலே பிறந்தவங்க உங்க மூணு குழந்தைகளும்! நாங்க கல்யாணமாகியும் தனியா பிரிந்து வாழாமல், உங்களோட நாங்க வாழறோம், உங்களை நாங்க வைத்து காப்பாற்றலே, நீங்க எங்களை வைத்து ....மாமா! நல்லா யோசனை பண்ணுங்க! இது உங்க வீடு! அல்லது நம்ம வீடு! சேர்ந்து வாழறோம், உங்களை நாங்க காப்பாத்தலே, சேர்ந்து வாழறோம்....இது உண்மை!
அம்மாவும் நீங்களும், எங்கமேலே உள்ள பாசத்தில் எங்களைப் பற்றி அதிகமா புகழறது, லேனா, மேனாவின் மனதை புண்படுத்திவிட்டது.
அவங்க கேட்கறது, என்னன்னா, அவங்க ரெண்டு பேரும் வாடகை வீட்டிலே வாழ்ந்துகொண்டு, உங்க பண உதவி எதுவும் இல்லாம வாழறபோது, பெருந்தன்மை யோட, உங்களிடம் குறை சொல்லாம, ஒதுங்கி வாழறதை பாராட்டாமல், அவங்களை குற்றம் சொல்வது தப்பில்லையா?
இதை புரிஞ்சிக்காமல், அம்மா சொல்லிட்டுப் போன தாலே, அவங்க நகை, புடவை களை என்னிடம் தந்தீங்க!
ஆனா, அவங்க மனநிலையை நினைச்சுப் பாருங்க! குதிரை கீழே தள்ளினதுமில்லாம, குழியும் பறித்த கதையா, அம்மாவின் நகைகளிலே அவங்களுக்கு பங்கு கிடையாதுன்னு அவங்க முகத்தில் அடித்தாற்போல, சொன்னால், கோபம் வருமா, வராதா?
நீங்களே சொல்லுங்க! தப்பு பண்ணினது, அவங்க இல்லே, நீங்க! ஆனா தண்டனை அவங்களுக்கு!
அதனாலே, வெறுத்துப் போய்ட்டாங்க!
'நாங்களும் அவங்க குழந்தைங்கதானே? ஏன் வேறமாதிரி பார்க்கறாங்க?' ன்னு வெதும்பறாங்க!
உங்களுக்கு தெரியாம, நான் அவங்க கோபத்தை தணிக்க, அம்மா நகைகளில் பங்கு தரேன்னு முன்வந்தேன். அவங்க கோபம் அதிகமாகி, ' நாங்க ஒண்ணும் பிச்சை கேட்கலே, பெற்றவங்க அன்பைக் கேட்கறோம்'னு அழுதாங்க!
நாங்களும் அழுதோம். அதனாலே....மேற்கொண்டு உங்க பிள்ளை சொல்வார்!"
" அப்பா! உயில், பணம், வீடு, சொத்தை விட, உங்க பாசத்துக்காக லேனாவும் மேனாவும் ஏங்கறாங்க!
அவங்களை பெற்ற பிள்ளைகளா நினைக்காம, விரோதிகளா அம்மா ஒதுக்கி வைச்சிட்டாங்களே என்கிற வருத்தத்திலே அவங்க இங்கே வந்து உங்களைப் பார்க்கலையே தவிர, எங்க ரெண்டு பேரிடமும் அடிக்கடி உங்களைப் பற்றி கேட்பாங்க, உங்களை அவங்க வெறுத்து ஒதுக்கலே, .....