சிறுகதை - ஐ லவ் யூடா - ரவை
" ரமா! உனக்குத் தெரியும், அவள் என்னை நம்பி தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டாள். இப்போது அவளை நான் கைவிடுவது, பாபம் இல்லையா?"
"விட்டல்! எனக்கு நீ எந்த சமாதானமும் சொல்லத் தேவையில்லை, என்னிடம் இப்போது உனக்கு தேவை, விவாகரத்து!
உனக்கு அது மகிழ்ச்சி தரும் என்றால், அதைவிட எனக்கு மகிழ்ச்சியை, வேறொன்று தரமுடியுமா? ஐ லவ் யூடா!
உன்னை காதலிக்கிறேன், என் காதலுக்கு அர்த்தம், உனக்கு எது சந்தோஷம் தருமோ, அதை செய்வதே!
விட்டல்! ஆகவேண்டிய ஏற்பாடுகளைச் செய்! கூடவே உன்னை நம்பியவளுடன் வாழவும் துவங்கு! நான் எந்த எதிர்ப்பும் செய்யமாட்டேன்.
சரி, நான் இங்கிருந்து போகவேண்டுமா, அல்லது நீ என்னைவிட்டு விலகிச் செல்லப் போகிறாயா?"
" ரமா! நீ இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பாய் என நான் நினைக்கவேயில்லை! நீ வித்தியாசமானவள்!"
" அதைவிடு! அந்த 'அவளை'விட அழகான பெண் கண்ணில் பட்டதும், அவளை கைவிட்டு விடாதே! என்னைப் போல, எல்லோரும் இருக்க மாட்டார்கள்! அதுவும் அவள் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு உன்னுடன் வாழ வருகிறாள், நினைவில் வை!"
விட்டலுக்கு, தன்னை ரமா, செருப்பால் அடித்தது போல இருந்தது!
அவனுடைய இலக்கு, அந்த 'அவளுடன்' நிரந்தரமா வாழ்வதல்ல, அவளிடமிருந்து பணத்தை கறக்கவேண்டும். கறந்தபின், கழற்றிவிட்டு வேறு ஒருத்தியை தேடுவதே அவன் நோக்கம்!
அவனுடைய சித்தாந்தமே, தான் எப்பவும் ஆனந்தமாக வாழவேண்டும், அதற்காக எதையும் செய்யலாம். சரி, தவறு; நியாயம், அநியாயம்; தர்மம், அதர்மம்; பாபம், புண்ணியம்; எல்லாமே கற்பனை!
ஆனால், தான் செய்கிற செயல்களுக்கு ஒரு நியாயம் உள்ளதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும்!
அரசியல்வாதிகளைப் பாருங்கள்! நடிகர்களைப் பாருங்கள்! தொழிலதிபர்கள் என்ன, விதிவிலக்கா?
இப்படி எல்லாருமே தாங்கள் மகிழ்ச்சி பெற, எதையும் செய்துவிட்டு, அதற்கு ஒரு நியாயத்தை சொல்வார்கள்!
உண்மையா, இல்லையா?
அவரவர் துறையில் இதைத்தானே செய்கிறார்கள் தான் செய்வதில் என்ன குற்றம்?