(Reading time: 6 - 12 minutes)

    'வீட்டில் என்னை ஒரு ஒருவனுக்கு கட்டிவைக்க, முடிவு செய்திருக்காங்க!

   அவன் ஒரு குடிகாரன் என்பது அவர்களுக்கு தெரியாது! எனக்கே நேற்று தான் தெரிந்தது......'

  என தெரிவித்தபோது, நீ எனக்காக என் பெற்றோரிடம் பேசி அந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டு நீயே மணந்தாய்!

    நீ அவ்வளவு நல்லவன்! அதனால்தான் ஐ லவ் யூடா!

   எனக்கு நீ ஓடிவந்ததால், இப்போது நான் உனக்காக ஓடி வருகிறேன்.

   நல்லவேளையாக, நீ இப்போது மணக்கப்போகும் மாளவிகாவும் நம் ஆபீஸில் வேலை செய்வதால், எனக்கு அவளை தெரியும். நல்ல பெண்! அவளுக்கு இஷ்டம் இல்லாமல்தான், அவளின் கல்யாணம் நடந்தது, போன வருஷம்!

   என் காதில் விழுந்த செய்தியை சொல்கிறேன், விட்டல்!

     அவளை மணந்தவன், அவளுடைய பணத்துக்காகத் தான் மணந்திருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன், அவளிடமிருந்து பணம் கறக்க முயற்சித்திருக்கிறான். உஷாராகி விட்டாள், மாளவி!

     அதனால்தான், அவனை கழற்றி விட்டாள்.."

   விட்டல் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். அப்படியானால், தனக்கும் அதே முடிவுதானோ என யோசித்தான்.

 " விட்டல்! கொஞ்சம் பதட்டத்தில், அவசரத்தில், மாளவி எடுத்த முடிவு இது!

  தவறு நடந்து அவள் ஏமாற வாய்ப்பு அதிகம்.

 தவிர, அவள் கணவனும் அவளை நம்பவைத்து ஏமாற்ற முயற்சிக்கலாம்.

   அதனாலே, முதல்லே நீ அவளிடம் விவரங்களை கேள்!

   விவாகரத்துக்கு, சட்டப்படி இத்தனை சீக்கிரம், ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை. குறைந்தது, ஆறு மாதமாகும்.

     குடும்பநல கோர்ட்டில் ஆஜராகி, இருவரும் விவாக ரத்துக்கு சம்மதம் தெரிவித்தாலும், கோர்ட்டு ஆறு மாதங்கள் இருவரையும் மறு பரிசீலனை செய்யச் சொல்லும்.

    அதனாலே, மாளவியின் கணவன், வெற்றுக் காகிதம் ஒன்றில் எழுதி கையெழுத்துப் போட்டால் போதாது!

    அதை நம்பி மாளவிகா உன்னை மணந்தால், உன்மீது அவன் தன் மனைவியை 'ரேப்' செய்ததாக கேஸ் போடலாம்.

   இவ்வளவு சிக்கல் இருக்கு.  விட்டல்! நான் இதை சொல்வதனால், ஏதோ எனக்கு நீ அவளை மணப்பது சம்மதமில்லை என நினைத்து விடாதே!

11 comments

  • Ah ah ah :clap: climax vera level ravai sis. Kadhai supera irunthuchu. Athula neraya information irunthuchu short story la neraya matter sonamari oru feel enaku thank u dr.
  • [quote name=&quot;Vinoudayan&quot;]Ungal anbuku thanks🙏 younger brother marriage so little busy eni thavaramal comments varum[/quote]<br />I am touched by your reassurance.
  • Good evening, dear Jeba! கற்பனைக் கதாபாத்திரங்களையும் வெறுக்கிற அளவுக்கு, தாங்கள் உணர்ச்சிவசப்பட்டிருப்பது, என் எழுத்துக்கு கிடைத்த பரிசு! அதிலும், இப்படிப்பட்டகதைகள் ஏராளமாக எழுதுகிற தாங்களே கோபம் கொள்வது, நோபல் பரிசு கிடைத்ததுபோல் உள்ளது! நன்றி!
  • Good evening uncle.. sorry late comment...<br />Story nala than irunthathu.. interesting ah mudivu enavaga irukumnu aavala irunthathu. But yeno pidikala.. Ivana madri atkaloda valrathai vida thaniyaga irupathe nalathu... Selfish..thanai patri matum Ivana poi... Enaku ithula yaraium pidikala... But end varai vasika oru ethirparpu irunthathu..
  • wow verupatta sinthanai :clap: nalla kathai sir ippo ulla kaalathil nadithaal thaan nambugiraargalo endru thonuthu :Q: :thnkx: & :GL:
  • அன்புள்ள மகளே! சில நாட்களாக உன்னை காணாமல் வருந்தினேன் இன்று உன் விமரிசனத்தை பார்த்ததும், ஆறுதல் அடைந்தேன். குட் மார்னிங்!
  • Dear Adharva! Good morning! இந்த எதிரொலிக்காகத்தான் நான் கதை எழுதிவந்தேன்.தாங்கள் எந்தக் கதையையும் மேலெழுந்தவாறு படித்துவிட்டு மறந்துவிடுவதில்லை. படிக்கும்போதே, கதைக் கருவை உள்வாங்கி, கதையுடன் ஒன்றி நின்று, ரசித்து, வெடிக்கவேண்டிய அவசியமிருந்தால்வெடித்து நொறுக்குகிறீர்கள்! இப்படி மற்றவர்களிடமும் எதிர்பார்த்து ஏமாந்ததால், சில மாதங்களாக கதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். தங்களுக்கு நன்றி!
  • Rama love towards vital sounds really strange....ivanu ellam.oru aalu 3:) first one kudikaran ivan mattum ena uthamana steam he is a big fraud 😈 anyway she helped to save malu's life.... But rama can also stay away from this betrayer facepalm <br /><br />Thank you for the story uncle.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.