" என்ன, நான் சொல்வது புரிகிறதா?"
ரமாவின் குரல் கேட்டு விட்டல் சிந்தனையிலிருந்து மீண்டான்.
" என்ன கேட்டே?"
" நான் இங்கிருந்து போய் விடணுமா, அல்லது நீ விலகி செல்கிறாயா?"
" அது.....வந்து......"
" அவள் சட்டப்படி கணவனை விவாகரத்து செய்துவிட்டாளா?"
" அது....வந்து..." " அதை இன்னும் அவளிடம் கேட்கலையா? போ, உடனே! அவளிடம் கேள்!
விவாகரத்து, சட்டப்படி முறையாக, ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டதா, அவள் விலகி வருகிறாளா, அவள் கணவன் விலகிச் செல்கிறானா, என தெரிந்துகொள்!
ஏன்னா, நான் போனபின் வருஷக் கணக்கில் அவளுடன் சேர்ந்து வாழ்வது, தள்ளிப் போனால், நீ திண்டாடுவாய்!"
" ரமா! என்னைப் பற்றி இந்த நிலையிலும் இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறாயே, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்...."
" என்னிடம் நீ நாடகம் போடவேண்டிய அவசியமே இல்லை! ஏன்னா, நீ சந்தோஷமாக இருந்தால்தான் உன்னுடன் வாழ்வதில் அர்த்தம் இருக்கும்
அதற்கு வழியில்லை என புரிந்ததும், விலகி, உனக்கு வழி விடுவதே, இருவருக்கும் நல்லது!"
" நீ ரொம்ப தெளிவாகப் பேசறே..."
" தப்பு செய்பவன்தான் குழம்பித் தவிப்பான். நான் ஒரு தவறும் செய்யவில்லை!
நம் இருவருக்கும், நடந்தது, பெற்ற வர்கள் செய்துவைத்த, முறை யான கல்யாணம்!
நீ இப்போது, உன் பெற்றோரின் சம்மதமும் பெறவில்லை, ஏன், அவர்களுக்கு சொல்லக்கூட இல்லை!
பயப்படாதே! நான் ஒரு நாளும் அவர்களிடம் சென்று முறையிட மாட்டேன்! அப்படி உன்னை பலவந்தப்படுத்தி வாழவேண்டிய அவசியம் எனக்கு இல்லை!
நீயும் நானும் ஒரே கம்பெனியில் வேலை செய்து ஒரே சம்பளம் பெறுகிறோம். என் வாழ்க்கை, உன் உதவி யின்றி, தொடர்ந்து நடக்கும்!
விட்டல்! உன் சுபாவம்! பிறர் கஷ்டத்தை உன்னால் தீர்க்க முடியுமானால், நீ உன் கஷ்ட,நஷ்டத்தை பார்க்காது, ஓடிப்போய், அவர்களுக்கு உதவி செய்வாய்!
இது என் சொந்த அனுபவம்!
நீயும் நானும் ஒரே ஆபீஸில் வேலை செய்வதால் நண்பர்களாக இருந்தபோது ஒருநாள் நான் உன்னிடம், என் வேதனையை சொன்னேன்: