" என்னடா ஆச்சு?"
" அது ஒண்ணுமில்லே, அப்பா! வேலைக்காரியை அழைச்சிண்டு ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்தேன்!
அவங்க சொல்றாங்க, வேலைக்காரிக்கு நோய் வரலையாம், அக்கம்பக்கத்து சனங்களுக்கு இருந்ததனால் கோரண்டைன்லே தனியா ஒரு மாசம் வைத்துக்கொண்டு அனுப்பி விட்டாங்களாம்....அவளிடம் சீட்டு ஒண்ணும் தரலையாம்!
அங்கே அவங்களுக்கு நோயாளிக்கு சிகிச்சை பண்ணவே ஆளில்லாம அவதிப்படறதினாலே, சீட்டே எழுதலியாம் யாருக்குமே...
அவங்க சொல்றதும் நியாயமா இருக்கு! அங்க வேலை செய்யற டாக்டர், நர்ஸ், சிப்பந்திக்கே பயமாம், இப்படித்தான் இருக்கும் சில மாசங்களுக்குன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க!
வேலைக்காரியை நான் நாளைக்கு வரச் சொல்லி இருக்கேன், அவளை நம்ம டாக்டரிடம் காட்டி கேட்போம், அவளை வேலைக்கு வைத்துக்கலாமா கூடாதான்னு! சரியா?"
" சரி, மீனாட்சி அழுது கொண்டிருக்கா, அவளைப் போய் சமாதானப்படுத்து!" இந்த நோய் உலகத்திலே வாழற மனித சமுதாயத்துக்கு கடவுள் விட்டிருக்கிற சவால்! அதை சுலபமாக சமாளிக்க முடியுமா?
பொறுமை காப்போம்!