வேலைக்காரி இருந்தாளே, அவளை நீ நம்ம மனுஷியா பார்த்து, அவளுக்கு அம்மை போட்டபோது, எப்படி கவனிச்சிண்டே, அவளை வீட்டைவிட்டு விரட்டலையே, இப்ப மட்டும் அந்த மனித தன்மை எங்கே போச்சு? எல்லாரையும் இங்கே வந்து உட்காரச் சொல்லு! நான் பேசணும்!"
தாத்தா உட்பட அம்மா, பிள்ளை, பெண்கள் அனைவரும் அமர்ந்தனர்.
" உங்களுக்கெல்லாம் என்ன பயம்? வேலைக்காரிக்கு வந்த நோய் நமக்கு வந்துடுமோன்னுதானே! அவளுக்கு வந்ததுதான், குணமாயிடுத்தே! மறுபடியும் வரலாமோன்னு பயமா?
நீங்க இந்த டி.வி., யில் காட்டறதை பார்த்துட்டு, பயப்படறீங்களா? சரி, உங்க பயம் நியாயம்னே, வைத்துக் கொள்வோம்,
வேலைக்காரி வீட்டுக்குள்ளே வரக்கூடாது என்று சொன்னவுடனே அந்த பயம் போயிடுத்தா? அது எப்படி? வேற யார் மூலமாவது வராதா? பிரிட்டீஷ் இளவரசருக்கும், பிரதமருக்கும், இந்த நோய் வந்துதே, வேலைக்காரி மூலமா வந்தது?
பக்கத்து வீட்டிலே உள்ள மனுஷங்களுக்கு வந்தா, அப்ப நமக்கு வராதா?
இந்த நாட்டிலே வாழற நூற்றிமுப்பது கோடி மக்கட் தொகையிலே, ஒண்ணரை லட்சம் பேருக்குத்தான் இது தொற்றியிருக்கு, புரியுதா?
அந்த ஒண்ணரை லட்ச நோயாளிங்களிலே, நாலாயிரம் பேர்தான் செத்துப் போனவங்க!
அதாவது நூற்றுக்கு மூணு பேர்தான்! மற்றவங்க குணமாயிட்டாங்க!
டாக்டர்களுக்கே வருது, நர்ஸ்களுக்கு வருது, போலீஸ் காரனுக்கு வருது, மந்திரிக்கு வருது, அவங்கள்ளாம் மறுபடி வேலை செய்யலையா?
யோசித்துப் பாருங்க! பயத்தினாலே, சிந்திக்கத் தவறாதீங்க!
இதுக்கு முன்பு, தொற்று நோயே வந்ததில்லையா? காலரா, ப்ளேக், அம்மை, ப்ளூ, வரலையா, போகலையா?
சரி, வேற வேலைக்காரியை வைக்கப் போறீங்களா இல்லையா? அவளுக்கோ, அவ குடும்பத்து உறவுங்களுக்கோ வந்துதா இல்லையான்னு உண்மையை சொல்வாங்களா?
நம்பித்தானே வேலைக்கு வைக்கணும்?
உங்களுக்கு ஒரு ஐடியா தரேன், நம்ம வேலைக்காரியை நாமே ஒரு டாக்டரிடம் அழைத்துப்போய் காட்டுவோம்!
அவர் சொல்படி கேட்போம், சரியா?"
"நீங்க பேசியாயிடுத்தா, இப்ப நான் பேசலாமா?"
" தாராளமா!"