நம்ம கடைக்கும் வருவாங்க, நாளுக்கு நாள் ஊரிலே கிராமத்திலிருந்து நிறைய பேர் புதுசா வந்து வசிக்கிறாங்க, அவங்களுக்கு நான் வித்துப் பொழச்சுக்க, நீங்க அனுமதிங்க, போதும்!"
"சிவா! நீ பொய் பேசறே, வேற ஏதோ பிளானிலேதான் கடை போடறே, உண்மையை சொல்லிடு....ரெண்டு பேரும் ஒத்துமையா பொழச்சுப்போம் சொல்லு!"
" ஐயா! ஒரு விஷயம் சொல்றேன், புரிஞ்சுக்குங்க! பேருக்குத் தான், என் கடைலே பீடி, சிகரெட், விற்க போறேன், ஆனா அதிலே காசு சம்பாதிக்கப் போறதில்லே, வேற ஒண்ணு ரகசியமா விற்கப்போறேன், அவங்க அதை வாங்கியதும் நேரே உங்க கடைக்கு வந்து பீடி, சிகரெட் வாங்கிட்டுப் போவாங்க, ஒரே மாசம் பாருங்க, விஷயம் புரியும்!"
" சிவா! உன்னை நம்ப லாமா? நான் பிள்ளைகுட்டிக் காரன்! வயத்திலே அடிக்காதே!"
"ஒரே மாசம்! அப்புறம் சொல்லுவீங்க, நான் பொய் பேசறேனா, உண்மை பேசறே னான்னு........"
தெய்வமே! இப்ப நான் என்ன செய்யறது? அவனை நம்பறதா, இல்லையா? நீ என்னை கைவிட்டுடாதே!
எனக்கு இப்ப இன்னொரு கவலை, ஈசா!
அவன் ஏதோ ஒண்ணு, என் கடையில விற்காத ஒன்று அவன் கடைல, விற்கப் போவதா சொல்றானே, அது என்னவா இருக்கும்?
கஞ்சா, அபின், கள்ளச் சாராயம் இப்படி ஏதாவது இருக்குமோ?
அப்படி ஏதாவதுன்னா, என் கடை வாடிக்கைங்க, அவன் கடைக்கு பூடுமே, என் கதி?
அவனோ, அவன் கடைக்கு வரவங்க, நிச்சயம் என் கடைக்கு வருவாங்க, எனக்கு வியாபாரம் அதிகம் ஆகுங்கறான், ஒரு மாசம் பொறுங்கறான்,
இந்தக் காலத்துப் பசங்க, எதுக்கும் பயப்பட மாட்டாங்க! துணிஞ்சகட்டை!
ஒரு மாசத்திலே, என் கடை வியாபாரம் படுத்துட்டா பிறகு எழுப்பறது கஷ்டமாச்சே!
இறைவா! இப்ப நான் என்ன செய்வேன்?
இறைவன் பதில் தரவும் இல்லை, நேரில் வரவுமில்லை
இறைவனுக்கு அடுத்த சக்தி எது? ஆம், அவளைக் கேட்போம்!
என் மனைவியிடம் இது பற்றி கூறினேன்.
" கவலைப்படாதீங்க! இந்த ஒரு மாசம் பார்ப்போம். நம்ம கடை வியாபாரம் ரொம்ப குறைஞ்சா, ஊருக்கு திரும்பிப் போய், பண்ணைலே கூலியா சேர்ந்துடுவோம்..."
" இப்பல்லாம், விவசாயம் சரியா இல்லியே......."
"ஆமாம், நாலைந்து வீடு களிலே நான் வேலை பார்த்து சம்பாதிக்கிறேன், நீங்களும் தினக்கூலியா வேலை பார்த்து சமாளிக்கலாம்...."