" இந்த ஊரடங்கு ரெண்டு மாசம் நீடிச்சதிலே, வீட்டு வேலைகளை தாங்களே செய்து பழகிட்டதாலே, யாரும் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிறதில்லே....தினக்கூலி வேலையும் கிடைக்காது, ஏன்னா, பெரிய வேலைங்க எல்லாம் பணமில்லாம நின்னு போச்சு......."
என் மனைவியும் இந்த இக்கட்டான நிலைமையை புரிந்துகொண்டு, மௌனம் ஆனாள்.
இறைவா! ஏனிந்த சோதனை?
ஏதுமறியா சின்னப் பிள்ளைங்களை எப்படி நான் காப்பாற்றப் போறேன்!
கடைசி முயற்சியாக, முருகேசனைப் பார்த்து அவன் மகன் சிவாவின் அந்த ரகசிய பொருள் என்ன எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சென்றேன்.
" முருகேசா! நான் என் பெட்டிக் கடை நடத்தி உயிர் வாழறவன்! என் பிழைப்பை கெடுக்க வேண்டாம்னு உன் மகனிடம் சொல்லிவைப்பா!"
" நீ ஏன் அப்படி நினைக்கிறே?"
" அவன் சொல்றான், என் கடையிலே விற்காத பொருள் எதையோ அவன் விற்கப் போறானாம், அதை வாங்கற அத்தினி பேரும், என் கடை வந்து, பீடி, சிகரெட் வாங்க வருவாங்கன்னு சொல்றான், எனக்கென்னமோ சந்தேகம் வருது........"
" என்ன சந்தேகம்?"
" சிவா, ஒருவேளை கஞ்சா அபின் மாதிரி ஏதாவது விற்க நினைக்கறானோன்னு...."
" அதனால, ....."
" வரவங்க, அவங்க பணத்தை போதை மருந்து வாங்க செலவு பண்ணிட்டா என் கடையிலே வாங்க ஏது பணம்?"
" இதுதானே உன் பயம்? அவனிடம் சொல்றேன்...."
வேறு ஏதும் பேச வழி இல்லாமல், வீடு திரும்பினேன்
மறுநாள், என் கடையை நான் திறப்பதற்குமுன் சிவா அவன் கடையை திறந்து, விற்பனையும் அமோகமாக நடந்து கொண்டிருந்தது.
வாங்கிச் செல்பவர்கள் என்ன எடுத்துப் போகிறார்கள் என உன்னிப்பாக கவனித்த போது, ஆளுக்கொரு பேக்கட் எடுத்துக்கொண்டு, நேரே என் கடைக்கு வந்து நின்றார்கள்.
பீடி, சிகரெட் வாங்கிக் கொண்டு சென்றனர். என் ஆவலை கட்டுப்படுத்த வழி தெரியாமல், ஒருவரை நிறுத்தி விசாரித்தேன்.
" அந்த பேக்கட்லே என்ன இருக்கு?"
" ரகசியம்! வெளியிலே தெரிந்தால், பிறகு அவர் விற்கறதை தடை பண்ணிடு வாங்க..... அதனால, நான் சொல்றத, யாருக்கும் சொல்லிடாதீங்க.....இந்த பேக்கட்ல, இரண்டு இட்லி, ஒரு