பெருமைப் படவேண்டும்!
பிறருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, வருந்தக் கூடாது.'
நமது பள்ளி ஆசிரியரும் இதற்கு விலக்கல்ல!
நான் சொல்வது தவறு எனில், மன்னிக்கவும்!"
குருநாதன் சொல்லி முடித்ததும், வகுப்பு ஒரு நிமிடம் நிசப்தமாக இருந்தது பிறகு, ஆசிரியர் வரதன் கை தட்டியதும், வகுப்பும் சேர்ந்து கொண்டது!
ஆசிரியர் வரதனுக்கு நெடுநாட்களாக, தன்னை சமூகம் மற்ற துறையில் உள்ள வர்களை மதிக்கும் அளவு மதிப்பதில்லை எனும் குறை உண்டு!
தன்னை தன் மனைவி கூட உயர்வாக நினைப்பது இல்லை என்ற வருத்தம் உள்ளவர்!
குருநாதன் பேச்சை கேட்டதிலிருந்து, வரதன் யோசிக்க துவங்கினார்.
தன்னை மாற்றிக் கொள்ள தீர்மானித்தார்!
இனி எதிர்பார்ப்புகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
ஒப்பிடுதலை கைவிட வேண்டும்.
பிறரின் ஏச்சும் பேச்சும் தன்னை பாதிக்க இடம் தரக் கூடாது!
மதிப்பு, மரியாதை, அன்பு எதையும் பிறரிடம் எதிர்பாராமல், தான் பிறர்க்கு தாராளமாக தரவேண்டும்.
இருப்பது போதும், தேவை எதுவும் இல்லை!
எப்போதும் நம்மைவிட கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிட முயலவேண்டும். அதிலே சந்தோஷம் பெறுவது நிரந்தரமானது!
நிகழ்காலத்தில் வாழ வேண்டும். கடந்த காலத்தை யும் எதிர்காலத்தையும் எண்ணி வருந்துவதும் கனவு காண்பதும் பயன் அற்றவை!
வரதனின் போக்கிலே தெரிந்த மாறுதலைக் கண்டு அவன் மனைவி விமலா பெருமைப்பட்டாள்.
தானும் கணவனைப் போலவே வாழ முடிவு செய்து தன் மன பேயாட்டத்துக்கு விடை கொடுத்தாள்.
சமூகத்தால் இதை எப்படி பொறுக்க முடியும்?
கடுமையாக வரதனை சோதனை செய்ய துவங்கியது.
ஒரு நல்ல நாள் பார்த்து வரதன்-விமலா வீட்டுக்கு அது, பிரபாகரன் உருவத்தில் வந்து சேர்ந்தது!
பிரபாகரன், வரதனின் அண்ணன்! அவன்தான், விமலாவை தேர்ந்தெடுத்து, தம்பிக்கு மணமுடித்தவன்!