ஒத்துக்கிறேன், நாளைக்கு கட்டாயம் டாக்டரைப் பார்க்க நீங்க ரெண்டு பேரும் போறீங்க! அவ்வளவுதான் நான் சொல்வேன், உங்களுக்கு கெடுதல் நினைப்பேனா நான்?"
அன்றைய உரையாடல் அத்துடன் முடிந்தது!
அம்மாவும் அண்ணனும் தனியே பேசிக்கொண்டனர்.
" அம்மா! நீ அழகா அழுத்தமா சொல்லியிருக்கே, பார்ப்போம், என்ன செய்யப் போறாங்கன்னு......."
" பிரபாகரா! அவங்க ஏன் பிடிவாதமா இருக்காங்கடா? ஒருவேளை, ஏற்கெனவே, டாக்டரை பார்த்திருப்பாங்களோ? அவர் நல்ல பதிலா தந்திருக்க மாட்டாரோ? அது நமக்கு தெரிந்தால், வேற சில முடிவு எடுக்க நாம கட்டாயப்படுத்து வோமோன்னு பயப்படறாங்களோ? குழப்பமா இருக்கேடா....."
"அம்மா! பெற்ற வயிறு பதறுவது எனக்குப் புரியுது! அதே சமயம், தம்பி வரதன் சொல்றதிலே நியாயம் உள்ளதும் தெரியுது!
நீ சொல்கிறபடி, அவங்க டாக்டரிடம் காட்டி, டாக்டர் சொல்கிறதை அவங்க ஏத்துக்கிற பக்குவம் இன்னும் தனக்கு வரலைங்கிறான், வரதன்!
விளக்கமா சொல்றேன், ஒருவேளை, டாக்டர், விமலா தாயாகிற வாய்ப்பே இல்லை என்று சொல்லிட்டா, அடுத்து நீயும் நானும் வரதனை சும்மா விடுவோமா? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவோ, அல்லது ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணி வளர்க்கவோ சொல்வோம், இல்லையா?
இந்தமாதிரி சூழ்நிலை வந்தால், அதை ஏத்துக்கிற மனப் பக்குவம் அவனுக்கு வரலைன்னு வரதன் அழுத்தமா சொல்றான், இது முழுக்க முழுக்க அவங்க ரெண்டு பேருடைய வாழ்க்கைப் பிரச்னை!
நம்ம விருப்பத்தை அவங்கமீது திணிப்பது, சரி இல்லைம்மா!
அவங்க இப்ப நிம்மதியா இருக்கறாங்க, நாமதான் நிம்மதியில்லாம, ஊரைவிட்டு ஊர் வந்து, அவங்களை நம்ம வழிக்கு மாற்ற முயற்சிக்கிறோம், .......
இப்ப, அவங்க நிம்மதி யும் போச்சு!
சரி, கடவுள்மீது பாரத்தைப் போட்டு, நாளை அவங்க என்ன சொல்றாங்க என்று பார்ப்போம்........"
இதே நேரத்தில், வரதனும் விமலாவும் தங்கள் படுக்கையறையில், தீவிரமாக யோசித்து கருத்து பரிமாறிக் கொண்டனர்!
பொழுது விடிந்தது! பிரபாகரனும் அம்மாவும், வரதனின் பதிலுக்காக காத்து இருந்தனர்.
வரதனும் விமலாவும் இவர்களுடன் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர,