அவர் பணக்கார குடும்ப வாரிசு! ஆனால், நட்புக்கு இலக்கணமாக அவரைத்தான் சொல்லலாம்!
பலமுறை, அவர் கங்கா தரனை, யாராவது அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்க தூண்டியிருக்கிறார்.
" வணக்கம், ஐயா! நான் சம்பத்குமாரின் மகன், கபிலன்! அப்பா என்னிடம் உங்களை பார்க்க வற்புறுத்தினார்......"
" வாங்க, உட்காருங்க!" கபிலன் தோளில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டு இருந்தது!
கோமதி உள்ளிருந்து வந்து, கபிலனிடமிருந்து அக் குழந்தையை வாங்கி, சோபாவில் படுக்க வைத்தாள்.
திடுமென, கபிலன் கண் களிலிருந்து தாரையாக வழிந்தது கண்ணீர்!
" ஐயா! எங்கப்பா, அம்மா, மனைவி மூவருமே ஒருவர் பின் ஒருவராக, இந்த தொற்று நோயில் இறந்து விட்டனர்......."
" கடவுளே! இதென்ன கொடுமை! ரொம்ப நல்லவங்களை ஏன் இப்படி சோதிக்கிறே? இது கொடுமை! இப்ப இந்த சின்ன குழந்தையை வளர்க்க இவன் என்ன கஷ்டப்படுவான்னு நீ அறியாதவனா?........."
" ஐயா! அப்பா உங்களுக்கு இந்தக் கடிதம் எழுதியிருக்கிறார்........."
கபிலன் தந்த கடிதம் வாங்கிப் படித்தார், கங்கா! " அன்புள்ள கங்கா! இது என் இறுதிக் கடிதம்!
முதலில், என் மருமகள், அடுத்து என் மனைவி, இப்ப நான்....போகிறோம், பலியாகி இந்த தொற்றுக்கு!
என் மகனும் அவனுடைய சிறு குழந்தையும் தனியேவிட்டுப் போகிறோம்...
கங்கா! உன்னிடம் ஒரு பொறுப்பை விட்டுச் செல்ல அனுமதி கொடு!
என் அனைத்து சொத்துக்கும் ஒரே வாரிசான என் மகன் கபிலனை, உன் மகனாக, இனி நீயும் என் சகோதரி கோமதியும் ஏற்று துணையாக இருக்கவேண்டும் சிறு குழந்தையை உங்கள் குழந்தையாக வளர்க்கணும்.
பணமிருந்து பயன் இல்லை, பகவான் அருள் தேவை என்பதை இறுதியில் புரிந்து கொண்டேன்...."
இந்தக் கடிதம் அடுத்து கோமதியிடம் சென்றது.
அவள், கண்களில் நீர் வழிய, குழந்தையை கையில் எடுத்து, 'என் மகளே' எனக் கூறி முத்தமிட்டாள்!
கபிலனை, கங்காதரன் 'என் மகனே' என கட்டித் தழுவினார்!
'இந்த ஒரு அரிய வாய்ப்புக்காகவா, எங்களை நீ இத்தனை வருஷம் காத்து வந்தாய்,