Page 45 of 66
”சரி செய்றேன்”
”நாளைக்கு ஆஸ்பிட்டலுக்கு வந்துடு”
”ம் வரேன்”
”மதியம் லன்ச்சுக்கு வந்துடு”
”ம்”
”ஆமா உனக்கு என்ன சாப்பிட பிடிக்கும்” என கேட்க அவனும் ஆர்வமாக தனக்கு பிடித்த உணவுகளைச் சொல்ல அவளும் அதை மனதில் பதியவைத்துக் கொண்டு சிரித்தபடியே அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும் சரவணன் வைதேகியிடம் வந்தான்
”அம்மா உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”
”என்ன விசயம்”
”இப்ப மலரை பார்த்தேன்”
”இங்கயா”
”ஆமாம் மளிகை சாமான் வாங்க வந்தா”
”என்ன சொன்னா”
”எனக்கு அவள் ஆஸ்பிட்டல்ல ஏதோ டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தராளாம்”
”அப்படியா ஆனா உனக்கு ஆஸ்பிட்டலே பிடிக்காதே”