வேண்டுமென்ற ஆர்வத்தோடுதான் ஈசுவராாதன் அந்த வேலையில் அமர்ந்தான். ஆனால் போகப் போக அவனுக்கு அசோகரிடம் இருந்த மதிப்பு அதிகரித்தது. அவர் மீது அன்பும் தோன்றி வளர்ந்தது.
பொதுவாகத் தலைவர்களாக விளங்குவோரிடம் தூரத்திலிருந்து பழகுவதே சிறப்பு. அவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் உய்ர்ந்த மதிப்பும் கருத்தும் நெருங்கிப் பழகப் பழகக் குறைந்துவிடும். சில தலைவர்களிடம் நெருங்கிப் பழகப் பழக, ஏன் இந்த மனிதரிடம் பழகினோம் என்ற வெறுப்பும் ஏற்பட்டு விடும். பெரும்பாலான தலைவர்கள் நிலை இப்படித்தான். ஆனால் அசோகர் நிலை இப்படிப் பட்டதல்ல, நெருங்கிப் பழகப் பழக, அவர் மீது நமக்கு அன்பே உண்டாகும். அவருடைய கொள்கைளில் ஆழ்ந்த பற்றே உண்டாகும். அதற்குக் காரணம், அவருடைய உண்மையான செயலும், உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த மனப் பண்புமேயாகும்.
சுதந்திர உணர்ச்சியும் மகோன்னதமான இலட்சிய வேட்கையும் கொண்ட ஈசுவரனாதன், தன் இலட்சிய நாயகரான அசோகரிடம் நெருங்கிப் பழகப் பழக அவருடன் ஓர் அன்புறவால் பிணிப்புண்டான் என்றால் அது வியப்புக் குரியதல்ல. அன்புணர்ச்சி வளருமானால் பகையுணர்ச்சி கருகி மடியத்தானே செய்யும் ஈசுவரகாதன் பாடலிபுத்திரம் வந்தபிறகு தானே அசோகராய்-அசோகரே தானாய் ஆன ஒரு நிலையை எய்திவிட்டான். அவருடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் மாசுமருவற்ற அவனுடைய இளம் உள்ளத்திலே வேரூன்றி விட்டன. புத்த தருமம் அவனுடைய வாழ்வின் இலட்சியமாகி விட்டது. அரசியலிலேயும் புத்த தருமமே நிலைபெற வேண்டுமென்ற கருத்து அவனுக்கு உடன்பாடாயிற்று.
ஒரு முறை பெரும் சிக்கலான ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சிற்றரசன் ஒருவன் அசோக மாமன்னருடன் போர் தொடுப்பதாக அறிவித்து ஒலை அனுப்பியிருந்தான். ஒற்றர்களின் குறிப்பும் அவன் போர் ஆயத்தங்கள் செய்து வரும் உண்மையைப் புலப்படுத்தின.
அந்தச் சிற்றரசன் எண்ணம் இதுதான். அசோகர் போர் செய்யவில்லை என்ற உறுதி பூண்டிருக்கிறார். தான் போருக்குப் புறப்பட்டால், போரைத் தவிர்ப்பதற்காக விட்டுக்கொடுத்து விடலாம். தான் எளிதாக சுதந்திர அரசு பெற்றுவிடலாம். பிறகு அசோகரின் பேரரசுக்கு நடுவிலேயே தன் வலிமையால் ஒரு குட்டிப் பேரரசு கூட நிறுவிவிடலாம்.