(Reading time: 20 - 40 minutes)

பார்வதியம்மாவின் உடல் நடுங்கியது..கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

டாக்டர் என்னாச்சு டாக்டர்..இவரு யாரு? எங்கம்மா ஏன் இப்பிடி கத்துனாங்க?எங்கம்மா பேச முடியாம தவிக்கிறாங்க நீங்களே சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ் டாக்டர்...சீனு கெஞ்சினான்

ஆமாம்..இந்தம்மா.. சொன்னது போல இவரு பேரு கருணாதான்.இவர்தான் என்னை பத்து நாள் கொழந்தையா இருந்தப்ப நான் ரெயில்வே தண்டவாளத்துக்கிட்ட கிடந்தப்போ தூக்கிகிட்டுவந்து என்ன வளத்து ஆளாக்கி படிக்க வெச்சு என்ன இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வெச்ச தெய்வம்.

என்னிக்காவது ஒரு நாள் உன்ன பெத்தவங்கள நீ கட்டாயம் பாப்பன்னு அடிக்கடிசொல்லுவாரு.

"அவருக்கு மனைவி மக்கள் இல்லியா?"

இல்ல ...அவர் பார்வதிங்கர ஒரு பெண்ண காதலிச்சதாகவும் அந்த பொண்ணுக்கு வேறு ஒருவரோட திருமணம் ஆயிடுச்சின்னும்..இனி தன் வாழ்க்கைய்யில வேறு எந்த பொண்ணுக்கும் இடமில்லை என்றும் சொல்லி என்ன வளப்பதுலேயே தன் வாழ் நாளக் கழித்தவர் அவர்.

அந்தப் பொண்ணு  எந்த ஊர்ப் பொண்ணு?

தஞ்சாவூர் மாவட்டத்துல மருதானல்லூர்ன்னு சொல்வாரு.இந்த ஹாஸ்பிடலுக்குக் கூட அவர் விரும்பின பார்வதின்ற பொண்ணோட நினைவாதான் எம்.சி.பி.ஹாஸ்பிடல்ன்னு பேரு வச்சாரு. கூடவே பார்வதின்ர பேர்ல எந்த பெண் சிகிச்சைக்கு வந்தாலும் அவங்களுக்கு இலவச சிக்கிச்சை கொடுக்கணும்கிறது இங்க எழுதப் படாத ரூல்.அது அவரோட ஆசை.

கருணா இப்ப எங்க இருக்காரு?

அவர் காலமாகி மூணு வருஷமாச்சு.

கருணாவின் புகைப் படத்தைப் பார்த்து அடக்கமுடியாமல் அழுதுகொண்ருந்தார் பார்வதியம்மா.

தன் தாய்தான் டாக்டரை வளர்த்த கருணா விரும்பிய பெண் என்பது சீனுவுக்கு மட்டு மல்ல  அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

டாக்டர் நீங்க பத்து நாள் கொழந்தையா இருந்தப்ப தண்டவாளத்துக்கு அருகேர்ந்து இவர் எடுத்ததா சொன்னீங்களே அது எந்த ஊர்ல நடந்திச்சு..அழுதபடியே திக்கித் திக்கிக் கேட்டார் பார்வதியம்மா.

"திண்டுக்கல்ன்னு சொல்லிருக்காரு"...இருங்க..என்று சொல்லியபடி மேஜை டிராவுலிருந்து ஒரு போட்டோவை எடுத்து வந்து காட்டினார் டாக்டர்.இவருதான் என்ன தூக்கிக்கிட்டு வந்தப்ப ரெயிலில அடிபட்டு செத்தவராம்.. சொல்லிக்கொண்டே பார்வதியம்மாவிடம் ஒரு போட்டோவைக் காட்ட....

அப்பிடின்னா..நீங்க..நீங்க..நீ..நீ...என்னோட மகன்தான்..என்னோட புள்ளதான்...இந்த போட்டோல  இருக்கிறது ஒன்னோட அப்பாதான் எம் புருஷந்தான்..கத்தினார் பார்வதியம்மா.நீயும் சீனுவும் ரெட்டைப் பிள்ளைகள்.சீனு இந்த டாக்டர் ஒன்னோட கூடப் பிறந்தவண்டா....

அம்மா..அம்மா..இத்தன வருஷமா நான் தேடிக்கிட்டிருந்த என் தாய் நீங்களாம்மா?வேகமாய் நகர்ந்து வந்து தன் தாயின் கைகளைப்பிடித்துக்கொண்டார் டாக்டர்.சீனுவும் தன் தாயையும் கூடப் பிறந்தவனையும் ஒருசேர அணைத்துக் கொண்டான்.சட்டென ஒரு நிமிடம் அமைதி.

தன் இரு மகன்களையும் கொஞ்சமே கொஞ்சமாய் விலக்கிவிட்டு தனது நெற்றிப் பொட்டை எடுத்தார் பார்வதியம்மாள்.அச்செயல் ரெயிலில் அடிபட்டுச் செத்த... உடலால் மட்டுமே தன்னோடு வாழ்ந்த தாலிகட்டிய கணவனுக்காகவா?தன்னை மனதில் வைத்து கடைசி வரை தன் நினைவோடு வாழ்ந்து மறைந்த கருணாவுக்காகவா? அது பார்வதியம்மாவுக்கு மட்டுமே தெரியும்.

அம்மா..என்னம்மா..நீங்க சின்னவயசுல லவ் பண்ணின மேட்டர இதுவரைக்கும் ஒருதடவ கூட எங்கிட்ட சொல்லவே இல்லியேம்மா? சிரித்தபடியே விளையாட்டாய்க்  கேட்டான் சீனு...

அதானே..ஏம்மா சீனுகிட்ட சொல்லல்ல?ராஜராஜனும் தன் பங்குக்குக் கேகக..

பெத்தவங்க தங்களோட காதல் ஜெயிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தைகள்ப் பெத்திருந்தா அந்த குழந்தைங்ககிட்ட தங்கள் காதல சொல்லி மகிழ்வாங்க.. ஆனா காதல்ல தோத்துப் போய் பிரிஞ்ச யாரும் தங்களோட காதல அதிலும் குறிப்பா பெண்கள்  தம் பிள்ளைங்களிடம் சொல்லுவதில்லை..சாதாரணமா தங்களோட காதல் ஜெயிச்சிருந்ததாலும் அப்பாதான் குழந்தைங்ககிட்ட மொதல்ல சொல்லுவாங்க..அப்புரம்தான் அம்மா ..நாணிக்கோணி வெக்கப்பட்டு பிள்ளைங்ககிட்ட ஒத்துக்குவாங்க.அப்பிடியிருக்க தோத்துப்போன என் காதல..எப்படிச் சொல்வேன் உன்னிடம்?

அம்மா சொல்வது சரிதான் சீனு....ராஜு சொல்ல அதை ஆமோதித்தான் சீனு....

இப்போதெல்லாம் பார்வ்தியம்மாவின் குடும்பத்தில் எப்போதும் ஒரே கல கலப்புதான்.இருக்காதா பின்னே? சீனு-அகல்யா, பேரன் அஸ்வத்,பேத்தி அனுஷ்கா,,,,ராஜராஜன்-கல்பனா,பேத்தி திவ்யா...அனைவரும் பார்வதியம்மாவோடு ஒரே வீட்டில் ஒன்றாய் வாழும் கூட்டுக் குடும்பம் இல்லையா?அதான் சந்தோஷத்துக்குப் பஞ்சமேயில்லை.

மொக்க கதைன்னு திட்டாதீங்க ப்ளீஸ்...படித்து கோவப்பட்ட அனைவருக்கும் நன்றி...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.