அன்பே அன்பே - சித்ரா
This is entry #28 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே ....அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்று அவனால் நம்ப முடியவில்லை ...ஒரு மாதத்திலேயே ,பல வருடங்களாக அவனுக்கு உயிராய் இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதுக்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்...பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள் ,,,
இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே ..இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள் ...
ச்சேச்சே அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது ..
அவன் நினைத்து முடிக்கும் முன் ,பைக்கில் இருந்தவள் திரும்பினாள் ...அது அவளே தான்...! "
அவன் பார்த்துகொண்டிருக்கும் போதே ,பக்கத்துக்கு சந்தில் இருந்து வந்த அசுர வேக கார் ஒன்று அந்த பைக்கின் மீது மோத ,அவள் ஒரு நாலு அடி உயரே தூக்கப்பட்டு ,பக்கத்துக்கு பிளாட்போர்ம் மீது போய் விழுந்தாள் .பைக்கோடு ஓட்டி வந்த அவனும் சேர்ந்து சற்று தூரத்தில் கிடந்தனர் .
'ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனான் நவீன் ',
பின் அவசரமாக இறங்கி ஓடி அவளை நெருங்கினான் ,
தூக்கி எறியப்பட்ட வேகத்தில் அவள் ஒரு பொம்மையை போல் மயக்கமாய் விழுந்து கிடந்தாள் ,அவளை கைகளில் அள்ளிக் கொண்டு ,சற்று தூரத்தில் கிடந்த அவனையும் சிலர் தூக்கி வர ,அவர்களை தன் காரில் மருத்துவமனை கொண்டு சென்றான் .
'கூட வந்த அவனுக்கு அதிசயமாக பெரிய அடி ஒன்றும் படவில்லை' ,ஆங்காங்கே சிறு சிறு சிராய்ப்பை தவிர ..
'அவனை பற்றி கவலைப்படவோ அல்லது யார் அவன் என்ற எண்ணமோ நவீன் மனதில் எழவில்லை ,ஒரு துணி பொம்மை போல் கிடந்த அவள் நிலை தான் மனதை பாதித்தது'
ஆனால் அந்த கூட வந்தவனோ ஓயாமல் பேசினான் ,
''நான் சேகர் அவளோட கசின் ,கலிபோர்னியாவில் இருக்கேன் நேத்து தான் வந்தேன் ,வீட்ல எல்லோரும் பைக்ல போகாதே தான் சொன்னாங்க ,ஆனா எனக்கு ரொம்ப இஷ்டம் ,அதான் அவளையும் கூட்டிகிட்டு ஒரு கிப்ட் வாங்க போனேன் ,நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் பார்த்து ஒரு மாசம் ஆக போகுதாம் , அதற்கு உங்களுக்கு குடுக்க ...''
'அவன் முடிக்கவில்லை எரிச்சலாய் இருந்தது நவீனுக்கு ,அட அவளுக்கு பதிலாக இவனுக்கு அடிப்பட்டு இருக்கலாம் ' என்றும் ஒரு நினைப்பு எழுந்தது மனதில்
'அந்த நினைப்பை உதறியபடி போனை எடுத்து அவனிடம் நீட்டி'
'' டாக்டர் சுந்தர்ன்னு ஒரு நம்பர் இருக்கும் அதற்கு கொஞ்சம் கால் பண்ணுங்க ,அவர் மருத்துவமனைக்கு தான் போகிறோம் ,என் பேரை சொல்லுங்க'' என்றான்
'நல்ல வேலையாக சுந்தர் அப்போ அங்கே இருக்க ,அவனிடம் தகவல் சொல்லிவிட்டு விரைந்து மருத்துவமனை அடைந்தார்கள்'.
அப்போதும் எந்த அசைவும் இல்லாத இருந்த அவளை அட்மிட் செய்து வீட்டிற்கு அந்த சேகர் தகவல் குடுக்க அவர்களும் வந்து சேர்ந்தார்கள் .
,நவீன் தன் அப்பா அம்மாவிற்கு தகவல் தர அவர்களும் அங்கே வந்து சேர சற்று நேரம் யாருக்கும் எதுவும் பேச தோன்றவில்லை .
'கல்யாணம் கூடி வந்த சமயம் இப்படி பொறுப்பில்லாமல் மகளை அனுப்பி வைத்து விட்டீர்களே என அவர்கள் கோபம் கொள்ள கூடும் என மலரின் அப்பா அம்மா தயங்க '
நவீனுடைய அம்மா நேரே சென்று அவர் கைகளை பிடித்து கொண்டு , ''ஒன்னும் கவலைபடாதிங்க ,கடவுள் மேல நம்பிக்கை வைப்போம்'' என்றார் சுருக்கமாய்
சற்று நேரத்தில் அங்கு வந்த சுந்தர் ,''உயிருக்கு ஆபத்து இல்லை ,வெளிபடையான எந்த காயமும் இல்லை , ஆனாலும் இன்னும் மயக்கம் தெளியவில்லை ,தெளிந்தபின் அவங்க கண்டிஷன் கொஞ்சம் ஸ்டேபுலைஸ் ஆன பின் மேலும் சில டெஸ்ட் எடுக்க வேண்டும். அதை வைத்துதான் அவர் நிலை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும் '',என்றான் .
அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதே அப்போதைக்கு ஆறுதலாய் இருந்தது .
அன்று முழுவதும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை ,ஆனால் மறுநாள் அவளுக்கு தெளிந்த பின் தெரிய வந்த நிலை பேரிடியாய் இறங்கியது .
'தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த போது அவள் தண்டுவடத்தில் பலத்த அடி ,அதன் காரணமாக இடுப்பிற்கு கீழே செயல் இழந்து போய் விட்டது ,முதுகு தண்டிற்கு சேதாரம் இல்லை என்ற போதும் நெர்வ் அடி வாங்கி இருப்பது தான் காரணம்' என்றார்கள் ,
'அப்படி சேதாரம் இருந்தால் கூட அறுவை சிகிச்சை செய்து ஒரு முயற்சி பண்ணி பார்க்கலாம் , இந்த கண்டிஷனில் அதுவும் முடியாது , கடவுள் கிருபையால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு தானே சரி ஆகலாம் இல்லை ஆகாமலும் போகலாம்' என்று முடித்தார்கள்
அனைவருக்கும் அது அதிர்ச்சியாய் இருக்க அவள் பிடிவாதமாக இவனை பார்க்க மறுத்தாள் .
'அவளுடைய மன நிலை புரிந்தாலும் அவனுக்கு அவளுடைய ஒதுக்கம் ஏதுவாய் இல்லை'
அவளை பார்த்து பேச முற்பட்டவனை அவன் தந்தை தடுத்தார்,