(Reading time: 6 - 12 minutes)

''கொஞ்சம் பொறுமையா இருப்பா ,அவள் மனசும் உடம்பும் ஒரு சேர அடி வாங்கி இருக்கு ,நாம தான் பக்குவமா நடந்துக்கணும் ''

''அப்பா அவளோட இந்த நிலையால அவள் தான் என் மனைவி என்பதில்  எந்த மாற்றமும் இல்ல'' என்றான் நவீன் 

'அவன் நிலையை அங்கேயே அனைவருக்கும்  தெரியப்படுத்தி விட வேண்டும்' என்று நினைத்தான் 

''எங்க யாருக்கும் அதில் மாற்று கருத்து  இல்லை ,இருந்தும் அதையும் பொறுமையாக தான் அவளிடம் சொல்லி புரிய வைக்க   வேண்டும்'' என்றார் அவர் மென்மையாக 

'யாருடைய எந்த சமாதானத்தையும் அவள் ஏற்கவில்லை ,பிடிவாதமாக அவனை பார்க்க மறுத்ததோடு  அந்த கல்யாணத்திலும் இஷ்டம் இல்லை' என்றால் அவள் 

ரண்டு நாட்கள் இரண்டு யுகமாக கழிந்த பின் அவன் ஒரு முடிவிற்கு வந்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தினான். 

அதன் படி மறுநாள் காலையில் அவள் ரூமிற்குள்   நுழைந்தான் ,கண் மூடி படுத்திருந்த அவள் அரவம் கேட்டு கண் விழித்து  இவனை கண்ட நொடி அதிர்ந்தாள் .

'கண்கள் குளமாக  கன்னம் இரண்டில் பெருக்கெடுத்து ஓடியது கண்ணீர் '

'அவசரமாக அவளை அடைந்து அவள் கண்களை துடைத்து விட்டவன் ,

''இஷ்  அழாதே ,கல்யாணம் பண்ணும் போது யாராவது  அழுவாங்களா ,அப்புறம் மாப்பிள்ளை பிடிக்கலைன்னு நினைக்க போறாங்க'' என்றான் 

சுற்றி கண்களை சுழற்றிய அவளுக்கு அங்கே  இருந்த அப்பா அம்மா மாமா மாமி மற்றும் சேகர் கண்ணில் பட்டனர் .

'நர்ஸ்  உதவியுடன் அவளை சற்றே சாய்வாக  உட்கார வாய்த்தவன் , தன் கைகளில் தயாராக வைத்திருந்த தாலியை அவள் கழுத்தில் கட்டினான் ,கூடி இருந்த அனைவரும் செவிலி உட்பட  பூ தூவி வாழ்த்த இனிதே நடந்து சற்றென்று முடிந்தது அவர்கள் கல்யாணம் '.

'இவர்களுக்கு தனிமை கொடுத்து அவர்கள் விலக ,முன்னிலும் கூடுதலாக அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது '.

''போச்சுடா இப்போ மாப்பிள்ளை பிடிக்கலைன்னு நிச்சயம்  ஆயிட்டது'' என்றான் அவன் சிரித்துக் கொண்டே 

''ஒன்னும் பண்ண முடியாது மை டியர்   யூ   ஆர்   ஷ்டக்   வித்   மீ   பார்    லைப்லாங் ''

''ஏன் இப்படி பண்ணிங்க நவீன் ''

''என்ன பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கிற உன் மனசில ,அவ்வளவு சீப்பான ஆளா  தான  என்ன எட  போட்டுருக்கே ,எனக்கு ஒன்னு சொல்லு மலர் இந்த விபத்து கல்யாணத்திற்கு அப்புறம் நடந்தால் என்ன பண்ணி இருப்போம் , அல்லது எனக்கு  இப்படி நடந்திருந்தால் நீ என்னை விட்டு போயிருப்பியா சொல்லு''

 'அவள் மவுனமாக தலையை ஆட்டினாள்  இல்லை என '

''அப்புறம் நான் மட்டும் அப்படி செய்வேன்னு எப்படி நினைச்சே ''

''கல்யாணம்  என்ற முடிவு எடுத்ததில் இருந்தே உன் சுக துக்கம் என்னை சேர்ந்ததுன்னு தான்  நான் நினைச்சேன் ,உன் பிடிவாதத்தால் தான்  இப்படி அவசரமாக கல்யாணம் பண்ணி என்னை உனக்கு நிருபிக்க வேண்டி இருக்கு ,உன்னை என் கண்ணுல வச்சு நான் பார்த்துப்பேன்'' என்று முடித்தான் 

'அவள் நிறைவும் வெட்கமுமாக கைகளை நீட்ட அதை பத்திரமாக தன் கைகளால் மூடினான் நவீன்' 

அன்பே    அன்பே    நீ என்  பிள்ளை

தேகம் மட்டும் காதல்  இல்லை

 பூமியில் நாம் வாழும் காலம் தோறும் 

உண்மையில் உன் ஜீவன் என்னை சேரும் ..

This is entry #28 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.