(Reading time: 6 - 12 minutes)

லட்சியம் - தேவி

This is entry #41 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

love

வனின் மனம் முழுவதும் அவள் நினைவுகளே. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையை போலே அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயத்திருந்தார்கள்.

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே. இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்.

ச்சேச்சே அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது...

அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்...

ர்ஜுன் கண்டது தன் பியான்சி சுபத்ராவையே... அர்ஜுன் திருநெல்வேலி அருகே உள்ள ஒரு சிற்றூரை சேர்ந்தவன். சுபத்ரா தூத்துக்குடியை சேர்ந்தவள்.

அர்ஜுன் ஊரில் அவர்கள் குடும்பத்திற்கு மதிப்பு நிறைய.. ஏனென்றால் அவன் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணி புரிகிறவர்கள். குடும்பத்தில் ஒருவர் அல்ல ... கிட்ட தட்ட அத்தனை ஆண்களுமே ஏதோ ஒரு வகையில் நாட்டிற்காக பணி புரிபவர்கள்.

இன்றைய தலைமுறையில் அர்ஜுனின் இரு சகோதர்களில் ஒருவர் மருத்துவராக ராணுவத்திலும், மற்றவர் காவல் துறையில் நெல்லையிலும் வேலை செய்கிறார்கள். அர்ஜுன் ராணுவத்தில் கமாண்டோவாக இருக்கிறன்.

இரண்டு மாத லீவில் வந்தவனுக்கு வீட்டில் அவன் அம்மாவின் நச்சரிப்பால் திருமணம் செய்ய முடிவு செய்தான். உறவுகளின் மூலம் கிடைத்த வரனே சுபத்ரா வீட்டு சம்பந்தம்.

பெண் பார்க்க முடிவு செய்து , அர்ஜுன் குடும்பம் கிளம்பி தூத்துக்குடி சென்றனர். அவனுக்கு சுபத்ராவை பிடித்து விட நிச்சயம் செய்து, அவன் ஊருக்கு போகும் முன் திருமணம் முடிக்க வேகமாக ஏற்பாடுகள் நடந்தது,

திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அவன் தன் வருங்கால மனைவியை பார்க்கும் ஆவலில் வந்தவன், இந்த நிலையில் பார்த்தான்.

அவன் மனது துடித்தது. ஆனால் வெளியில் காட்டி கொள்ளவில்லை. அவர்கள் அவனை பார்க்க வில்லை.

அவர்களை பின் தொடர்ந்தவன், அவர்கள் ஒரு ரெஸ்டாரண்ட் சென்று அமர்வதை பார்த்து, அவனும் உள்ளே சென்றான்.

அவர்கள் அவன் பார்வை வட்டத்தினுள் இருந்தார்களே தவிர, அவர்கள் பேசுவது கேட்கவில்லை.

இருவரும் தீவிரமாக எதையோ பேசியவர்கள், கடைசியில் அவன் ஏதோ ஒரு பேப்பரை நீட்ட அதில் கையெழுத்துப் போட்டு கொடுத்தாள்.

பிறகு இருவரும் கிளம்பினர். அர்ஜுன் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தான் இப்போதுள்ள மன நிலையில் சுபத்ராவை சந்தித்தால் வீண் பிரச்சினை என்று எண்ணியவன், சரி என்ன நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்று முடிவு செய்தான்.

இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் அவன் சொல்லவில்லை, அதனால் கல்யாண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

அவன் தன்னில் குழம்பி கொண்டிருந்தான். அவன் அவர்கள் பைக்கில் சென்றதையோ, ரெஸ்டாரண்ட் சென்றதையோ தவறாக எண்ணவில்லை. ஆனால், சுபத்ராவோடு இருந்தவன் அவளிடம் ஒரு பேப்பரில் சைன் வாங்கியதை தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ந்த குழப்பத்தோடு திருமணமும் நெருங்கியது.

திருமணம் திருநெல்வேலியில் என்பதால், முதல் நாள் மாலை தூத்துக்குடிக்கு சென்று அர்ஜுனின் உறவினர்கள் பெண்னழைத்து வர, இவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர்.

இந்த இரண்டு மூன்று நாட்களாக இருவரும் பேசி கொள்ள வில்லை. அவள் வீட்டிலும் உறவினர்கள் அதிகமாக இருந்ததால், அவள் அதை கண்டு கொள்ள வில்லை.

முதல் நாள்  மாலை நிச்சயம் முடிய , பிறகு நலுங்கு வைக்கும் போது அவன் அருகில் இருந்தாலும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. உறவினர்களை அறிமுகபடுத்தும் போது அன்று அவளோடு பார்த்தவனும் இருந்தான்.

சுபத்ரா அவனை தன் மாமா மகன் என அறிமுகபடுத்த, அர்ஜுன் மனம் திடுக்கிட்டது. அவள் அண்ணன் தம்பி முறை என்றிருந்தால் எதுவும் தோன்றியிருக்காது. முறை பையன் எனவும் ஒருவேளை இவர்கள் இருவரும் விரும்பி, வீட்டில் ஒத்துகொள்ளத்தால், நாளை எல்லோர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களோ என்று பயந்தான்.

ஆனால் இருவரின் உடல் மொழியை பார்த்தால் அப்படியும் தோன்றவில்லை. சுபத்ரா வீட்டிலும் சாதரணமகதான் இருந்தார்கள்.

அர்ஜுன்க்கு யோசித்து பயித்தியமே பிடித்து விடும் போலிருந்தது. பிறகு எதுவானாலும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.