“தெரியாதுன்னு சொன்னேன்..கத்துக்க மாட்டேன்னு சொன்னேனா ? உனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தரணும்னுதான் ஒரு மாசத்துல கத்துகிட்டேன்.. அதுவும் உனக்கு பல்சர் தானே ரொம்பபிடிக்கும்…அதுனாலத்தான் “என்று கூறியவளை இமைக்காமல் பார்த்தான் ஷ்யாம்…
விழிகள் இரண்டும் கலங்கிட, அவள் தந்த சாவியை கீழே போட்டவன் ,அவள் அறியாதவண்ணம் அவள் பாதத்தை தொட்டான்… “பல மாதங்களின் முயற்சிக்கு பிறகு தான் அவனே பைக் ஓட்ட கற்றுக்கொண்டான்..ஆனால் இவளோ ஒரே மாதத்தில், அதுவும் இவனுக்காக ! ..வேறென்ன தோன்றும் அவனுக்கு ?”. ஆண் என்ற அகந்தையும் இல்லை, மமதையும் இல்லை…அதே நேரம் நடந்ததை சொல்லி அவள் புன்னகையை மாற்றவும் விரும்பவில்லை ..
“எங்கே உன் பயணம் போகிறதோ,
அங்கே உன் பாதம் தொடர்வது போல
உயிருள்ளவரை உன்னை தொடர்வேனடீ” என்று மனதிற்குள் கூறியவன் மெல்ல நிமிர்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு இறுக அணைத்து கொண்டான்.. அங்கு சந்தேகம் என்று விதை உடைந்து நம்பிக்கை எனும்வேர் அஸ்திவாரமாய் முளைத்தது..
ஹாய் நண்பர்களே.. நம்முடைய தாத்தா பாட்டி, அவங்களுக்குபிறகு அம்மா அப்பா, இப்போ நாமும் நமது அன்பிற்குரியவர்களும் அப்படின்னு கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்தா, நாம கொஞ்சம் வேகமாய் தான் இருக்கோம்… எப்பவுமே நம்ம முன்னோர்கள் அவங்க பட்ட கஸ்டத்தை நாம படக்கூடாதுன்னு நினைப்பாங்க… அவங்களை விட அடுத்த சந்ததி சிறப்பா இருக்கனும்னு ஆசைப்படுவாங்க…ஆனா, அன்பு காட்டுறதில் மட்டும் நாம அவங்களை விட பின்தங்கி தான் இருக்கிறோமோ? இனிய சொல் பேசுறதும், அதிக விலை மதிப்பு உள்ள பரிசை தருவதுதான் அன்பா ?அல்லது விலைமதிப்பு இல்லாத நம்பிக்கையை கொடுப்பது அன்பா ? நம்ம ஜெனரேஷன்ல,நம்பிக்கையின்மையை தூண்டிவிட பல காரணங்கள் அணிவகுத்து நிற்கிறது… அந்த காரணங்களை களைத்துவிட்டால் பிரிவென்பதேது ?? அதைதான் இந்தகதை மூலமாய் சொல்ல நினைத்தேன்..கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..நன்றி..
This is entry #63 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}