(Reading time: 16 - 31 minutes)

நீ எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா ?நீ என் வாழ்க்கையில வரும்போதே என் அப்பாவை காப்பாத்தின.. நன்றி சொல்லனும்னு தான் நான் உன்ன தேடினேன்.. நீயும் கிடைச்ச..ஆனா என்னை வெறுத்த..என் விதியை நெனைச்சு சிரிச்சுகிட்டேன். என்னை புரிஞ்சு நீயே எங்கிட்ட வந்த,எல்லாவிதமாகவும்..என் லைஃப்ல நீ சந்தோஷத்தை கொடுத்த… என் அப்பாவுக்கு பிறகு நான் ஒருத்தருக்கு உயிர் வாழனும்னா அது உனக்காகத்தான் டீ” … ஐ லவ் யூ என்று சொல்லாமலேயே அவனது காதலை சொல்லி இருந்தான் கிருஷ்ணன்.. பதிலுக்கு மௌனத்தாலேயே அவளது சம்மதத்தை அவளும் கூறினாள்.. இப்படியாய் மலர்ந்து வளர்ந்த கிருஷ்ணா ஹசீனாவின் காதல் கதை கார்த்திக் அப்பாவின் ஆசிர்வாதத்தோடு திருமணத்தில் முடிந்தது”

நிறைவான புன்னகையுடன் டைரியை மூடினாள் கார்த்திகா.. உடனே தனது தந்தைக்கு ஃபோன் போட்டாள்..

“அப்பா”

“ சொல்லும்மா “

“உங்க முதல் காதல் யாரு ?”

“ ஏன்?”

“ சொல்லுங்களேன்”

“ என் அப்பா.. அதுக்கு அப்பறம் உன் அம்மா”

“அம்மாவுடைய முதல்காதல்யாரு ?”

“உன் அப்பா”

“ என் முதல்காதல் யாரு தெரியுமா ?”

“ட்ரைன்ல உன் ஹீரோவை பார்த்தியா ?”

“ ஆமா.. ஹீரோவை பார்த்தேன், ட்ரைன்ல இல்ல… உங்க டைரியில… ஐ லவ் யூ அப்பா.. நீங்கதான் எனக்கும் ஹீரோ” என்றாள் அவள்.

“ஹ்ம்ம்ம் உன் அம்மா என் மனசை திருடினாள்..நீ என் டைரியை திருடிட்டியா ?” என்று கிருஷ்ணன் சிரிக்க, அவன் அருகில் ஹசீனாவும், எதிர்முனையில் நஷிகார்த்திகாவும் இணைந்து சிரித்தனர்.

ஹாய் ப்ரண்ட்ஸ் ..அதிக நெளிவுசுளிவுகள் இல்லாமல் ஒரு இயல்பான முதல்காதலை கண்முன் நிறுத்தினேன்னு நம்பறேன் – விக்னேஷ் கார்த்தி

 

This is entry #80 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.