கார் நிறுத்தம் கண்டது. டிரைவர் இறங்கி ஓடி ஏட்டிடம் ஏதோ கூற. ஏட்டு இவர்களை அழைத்து சென்று உள்ளே அமர செய்தான்.
"ஐய்யா ரவுண்ட்ஸ் போயிருக்கார்" என்ற ரைட்டர், அவர்கள் இருவருடைய பேர், அட்ரெஸ் எல்லாம் வசந்திடம் வாங்கிவைத்துக் கொண்டார்.
உடலில் அசைவில்லாமல் இருந்தாலும், ஸ்ருதியின் எண்ணம் எட்டு திக்கும் ஓடிக்கொண்டு இருந்தது. அருண் ஏன் இப்படி செய்தார்? மித்ரனை ஏன் போலீஸ் பிடித்து செல்ல வேண்டும்? இருவரும் கூட்டாளியா? அருணையும் போலிஸ் பிடித்து இருப்பார்களோ, என்ன புரட்சி இது? நான் பார்த்தது அருண் இல்லையோ?
வசந்திடம் இருந்து போனை வாங்கி ஜூம் செய்து சரி பார்த்துக் கொண்டாள். அது அருண் தான் என்று ஊர்ஜிதமானது.
டிரைவர் அவன் காதில் கேட்ட அத்தனையும் கமிஷ்னரிடம் மறு முறை சொன்னான். வசந்த் சென்று நடந்ததை விளக்க, விடியோவையும் பார்த்து விட்டு. "குட், ரொம்ப உதவியா இருக்கும். இப்படி நடந்ததா யார் கிட்டயும் சொல்லாதீங்க , உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்று அறிவுரைத்தார்.
"டிவி காரங்க கழுகு மாறி சுத்துவங்க" என்றார்.
தவறு செய்த அருணுக்குச் சட்டம் தக்க தண்டனை கொடுக்கும் என்ற திருப்தியில் வசந்த் பிலைட்டை விட்டிருந்தாலும், ஸ்ருதியை பத்திராமக வீடு வரை கூட்டி வந்தான்.
வீட்டிற்குள் நுழையும் வேளையில் வினிதா ஓடி வந்தாள், "ஸ்ருதி, ஸ்ருதி என்ன ஆச்சு பாத்தியா? அது அருண் தானா ?, அருண் செத்துட்டனாடி ?. ஏன் உன் நம்பர்க்கு கால்லே போகல?" என்றாள்.
டிவி திரையில் அருண் கொல்லப்பட்டதாக நியூஸ். மனகுழப்பம் போல என்று எண்ணிக் கொண்டாள். பேசவில்லை.
வசந்த் "என்ன உளறல் , அருண் சாகல. அவன் தான் கில்லெர்" என்றான்.
வினிதா "டிவியை பார், கொன்னவனே போய் டிவி ஸ்டேஷனில் பேசிட்டு அப்பறம் சரண் அடைஞ்சுட்டானாம், ஹிந்திகாரன், திரும்ப திரும்ப இதே நியூஸ் தான்" என்றாள்.
வேளச்சேரியில் இறங்கிக் கொண்ட அதே ஹிந்திகாரன், அடையாளம் கண்டு கொண்டாள் ஸ்ருதி. திரையின் கீழ் பகுதியில் அவன் பேசியது தமிழில் மொழி பெயற்கப்பட்டு ஒளிபரப்பானது.
அவன் சொன்னது "ஒரு பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவன் அருண், மற்றும் அவளுடைய அண்ணனையும் கொன்று விட்டான். அருண் செல்வாக்கினால் அந்த கொலைக்கான வீடியோ ஆதாரத்தை எங்களிடமிருந்து பிடுங்க என் நண்பன் மித்திரன் மேல் பொய் கேஸ் போட்டு அரெஸ்ட் செய்து போலீஸ் உதவியால் சாட்சிகளை அழித்து விட்டான்.
காதலித்த பெண்ணை இழந்த நான், பழி வாங்கி விட்டேன்.
கற்பழிக்க அவனே உரிமை எடுத்துக் கொண்டான், தண்டிக்க நமக்கு உரிமை யார் தர வேண்டும்? போதும் இந்தக் கொடுமை. அவளைப் போல பலரைக் காப்பாற்றுங்கள்". என்று முடித்தான் அந்த ஆண்மகன்.
பேச வார்தையில்லாத பதுமை ஆனாள் ஸ்ருதி.
தனக்குள்ளேயே "தேங்க்ஸ்" என்று எல்லோருக்கும் சொல்வதாய் சொல்லிக்கொண்டாள்
{kunena_discuss:785}