(Reading time: 15 - 30 minutes)

டையப் பாரு ரோபோ மாரி..முணுமுணுத்தார் காசாம்புவைப் பார்த்து.மாமி சொல்வதற்க்கேற்றவாறு காசாம்புவின் நடை ஒரு ரோபோ நடப்பது போல்தான் இருக்கும்.காசாம்பு நல்ல உயரம்.பருமனுமில்லாத ஒல்லியுமில்ல்லாத உடல் வாகு.நல்ல்ல்ல கருப்பு நிறம்.கிட்டத்தட்ட தார் போல அவ்வளவு கருப்பு.வாயில்

பற்கள் வரிசையாய்க் கட்டிவைத்தது போல்.ஆனால் மஞ்சள் கறை படிந்திருக்கும்.கிட்டே நெருங்க முடியாத நாற்றம் வாயிலிருந்து வரும்.ஒருவேளை வாய் நாறுவதால்தான் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் நாற்றமாய் வருகிறதோ?

தன் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தாள் காசாம்பு.ஊர்க் குப்பையெல்லாம் அந்தத் தெரு ஓரத்தில்தான் கொண்டுவந்து கொட்டப்படும்.சின்ன மலைபோல் குவிந்திருக்கும் குப்பை மேடு.தெருவெங்கும் காற்றிலபறந்து வந்து விழுந்து கிடக்கும் குப்பைக்கூளங்கள்.வேலிப்படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் காசாம்பு.அதுவரை வேலிப் படல் மூடியே இருந்ததால் உள்ளே அடைபட்டுக்கிடந்தன ஆடுகளும் அவற்றின் குட்டிகளும்.கிடா ஒன்று பெட்டை ஆட்டை(பெண் ஆடு) கர்பமாக்கியே தீருவது என்று நினைத்ததோ என்னவொ வெறித்தனமாய் அதனைத் துரத்தித் துரத்தி காரியத்தில் ஈடுபட முனைந்தது.

இரண்டு குட்டியாடுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறுவதும் இரண்டடி உயரத்திற்கு எம்பிக்குதிப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தன.காசாம்பு படலைத் திறந்ததுதான் தாமதம் எல்லாமாய் அடித்துப்பிடித்து வெளியில் ஓடின.ஒன்று மட்டும் சுவரோடு சுவராக நின்றபடி மெலிதாய் முனகிக் கொண்டிருந்தது.அது குட்டி ஈனும் தருணம் போலும்.ஹெக்கக்ஹெக்கே..ஹெக்கக்கெக்கே..என்று வினோதமாய் குரல் எழுப்பியது.

காசாம்புவுக்கு அது பிரசவிக்கப் போகிறது என்று புரிய..அடி சக்காளத்தி குட்டி போடப்போறியா என்று கேட்டபடி அந்த ஆட்டின் அருகில் போய் குந்தி அமர்ந்தாள்.மெல்ல அதன் முதுகு..பக்கவாட்டு வயிறு அடி வயிறு என்று இதமாய்த் தடவிக்கொடுத்தாள்.அந்தத் தடவுதல் அதற்கு இதமாய் இருந்ததோ என்னவோ கொஞ்சம் அமைதியாய் இருந்தது.எல்லாம் சற்று நேரம்தான்.வயிற்றிலிருக்கும் குட்டிகள் வெளியுலகைப் பார்க்க யாத்திரை கிளம்பிவிட்டனவோ என்னவொ அவை அசையும் ஒவ்வொரு அசைவிற்கும் ஆடு வலி தாங்காமல் கத்த ஆரம்பித்தது.மெல்ல மெல்ல வயிற்றை நீவிக்கொடுத்தாள் காசாம்பு.

ஆட்டின் பின்புறத்தில் ரத்தம் கசிய பரபரப்பானாள்.முதல் குட்டி மெல்ல எட்டிப்பார்த்தது.அதன் பாதி உடல் வெளியே வரும் வரை பொறுமையாய் இருந்தவள் பாதி உடல் வெளியே வர மெதுவாய் வெளியே இழுக்க தொப்பென்று கீழே விழுந்தது முதல் குட்டி.அடுத்தடுத்து இரண்டு குட்டிகள்.மொத்தம் மூன்று.சந்தோஷம் பிடிபடவில்லை காசாம்புக்கு.ஏற்கனவே தயாரித்துவைத்திருந்த வைக்கோல் பிரியால் குட்டிகளின் மேல் அப்பியிருந்த வெள்ளையும் சிகப்புமாய் இருந்த கழிவுகளைத் துடைத்து விட்டு கொஞ்சமும் தாமதிக்காமல் குட்டிகளின் கால்களிலிருந்து குளம்புகளைக் கிள்ளிப் போட்டாள்.அப்புறம்தான் குட்டிகள் கிடாவா,பெட்டையா(கிடேரி) எனப்பார்த்தாள்.

மூன்றும் கிடா.சுர்ரென்று உச்சிக்கு ஏறியது கோபம்..துத்தேறி...ஓ..சூ..வ...அறுக்க..இப்பிடியா மூணையும் கிடாவா போடுவ..?..இத வெச்சு என்ன பன்ணுறது?கோவத்தில் கத்திக்கொண்டே குட்டி ஈன்ற ஆட்டை பட்டென்று ஒன்று வைத்தாள்.அது தீனமாகக் கத்தியது.பாரு..பாரு..இளந்தாரி ஆணாடுகளுக்குதான் ..நல்ல காசு. இதுங்கள கொஞ்ச நாள்ளயே ஹகீம் பாய்ட்ட குடுத்து காசு பாத்துடமாட்டேன்?..மனசை சமாதானம் செய்து கொண்டு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அலக்கை எடுத்துக் கொண்டு தழை அறுக்க வெளியில் சென்றாள் காசாம்பு. கொஞ்சம் ஒதியம் கிளைகளையும் கொஞ்சம் கிளுவை மரக் கிளைகளையும் அலக்கால் ஒடித்துப் போட தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் கீழே விழுந்து கிடக்கும் இலைகளைப் பார்த்து விட்டு ஓடி வந்தன.மம்மம்மம் என்று ஆடுகள் நுனி வாயை வேகவேகமாய் அசைத்து இலைகளை லாவகமாய் வாய்க்குள் இழுத்துக்கொள்வது மிக அழகானது.அந்த அழகையெல்லாம் ரசிக்கும் மன நிலையில் காசாம்பு இல்லை.காலேல  ஐயிரம்மா குடுத்த டீ எம்புட்டு நாழிக்கு வரும்?பசிக்கிது..கம்மாயில குளிச்சிட்டு போயி சோத்த துங்கணும் என்று சொல்லிக்கொண்டவளாய் அறுத்துப்போட்ட தழைகளை ஒன்றாய்த் திரட்டி மார்போடு அணைத்துத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.குட்டி போட்ட ஆட்டின் முன் தழையினைப் போட்டுவிட்டு படலைச் சாத்திக்கொண்டு வாய்க்காலுக்குக் குளிக்கப்போனாள்.தண்ணீர் லேசாய் சூடேர ஆரம்பித்திருந்தது.முங்கி எழுந்தவள் எழும்போதே காலடியில் இருந்து கொஞ்சம் மண்ணை அள்ளி பரக் பரக் என்று உடம்பில் தேய்க்க ஆரம்பித்தாள்.ஆயிற்று  குளித்து முடித்து விட்டு கரை ஏறியவள் ஈரச் சேலையை உடம்பில் சுற்றிக்கொண்டு வீட்டுக்கு வர படல் திறந்து கிடந்தது.போகும்போது படல சாத்திட்டுதானே போனேன்.இப்ப தொறந்து கெடக்குது.அந்த லவுண்டி வந்துட்டுப் போயிருப்பாளோ?அந்த நார பூணா மட்டும் எதாச்சும் செஞ்சிட்டுப் போயிருக்கட்டம் அவ ம.....த அறுக்காம இன்னக்கி விடமாட்டேன்.கறுவிக்கொண்டே உள் கதவைத் திறந்து கொண்டு போனவளின் பார்வை அடுப்படிக்குச் சென்றது.சோற்றுப் பானை திறந்து கிடக்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.