(Reading time: 10 - 19 minutes)

டிகார மணி அடிக்கும் போதுதான் நான் என் பின்னோக்கிய நினைவுகளில் சென்று விட்டதை உணர்ந்தேன்.

இதே போல நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் எத்தனையோ நிகழ்வுகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களிடத்தில் நடக்கிறது.. நம் பொருளாதார நிலை உயர்ந்ததும் நம் பிள்ளைகளுக்கென தனி அறைகளைக் கட்டிக் கொடுத்து விட்டு அவர்களுக்கு துணையாக நாம் இருக்காமல் , அலைபேசியையும் , கணிணியையும் துணைக்கென வாங்கிக் கொடுத்து விடுகிறோம். நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கும் நமக்கு நம் பிள்ளைகளோடு ஐந்து நிமிடம் செலவழிக்க முடியவில்லை. நாம் நம் குழந்தைகள் மீது அன்பாயிருக்கிறோம் என்று நம் மனதில் தான் நினைத்து கொண்டிருக்கிறோம். நாம் நம் மனதிலே அப்படி நினைத்து விட்டால் அவர்கள் அந்த அன்பை உணர்வது எப்படி...? அதனால் தான் அவர்கள் "சாட்டிங்கில் நண்பர்களை சேகரித்து டேட்டிங்க் என்று போய் தன் கற்பை பள்ளியில் படிக்கும்போதே யாரோ ஒருவனிடம் களைந்து விட்டு வருகிறார்கள். பெற்றோரிடம் காணாத அன்பை யாரோ ஒருவரின் "ஐ லவ் யு" என்ற சொல்லில் இதுதான் அன்பு என்று நினைத்து தங்களுடைய வாழக்கையையே தொலைத்து நிற்கும் பிள்ளைகள் ஏராளம். பிள்ளைகள் விலை உயர்ந்த அலைபேசியை வாங்கிகேட்கும் போது நாம் உடனே வாங்கி கொடுத்துவிட்டு "நான் என் குழந்தயை மிகவும் நேசிக்கிறேன் ' என்று நாமாகவே நம்மை பற்றி மிகவும் உயர்வாகவே நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அந்த அலை பேசியில் தேவை இல்லாத நீலப்படங்களை பார்த்து அதையே நினைத்து படிக்க முடியாமல் போதைக்கு அடைமையாகி போவதை அறியாமல் நாமே நம் குழந்தை தறிகெட்டு போவதற்க்கு காரணமாகிவிட்டதை அறியாமல் இருக்கிறோம்.

ஒரே ஒரு வாழ்க்கை தான் நம் எல்லோருக்கும். அன்பை மனதில் விதைப்பது மட்டும் அல்லாமல் அதை செயலில் விதைப்போம்.

உலகிலேயே சிறந்த பள்ளியறை தாயின் கருவறைதான். நம் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் போதே , நாம் நல்லதே கேட்டு , நல்லதே கண்டு ...நல்லதே பேசி நம் குழந்தைக்கும் அதை கற்று கொடுப்போம். ..

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு. உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னை பூரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும் , உன் கண்ணின் காட்சிகளிலும் நட. ஆனாலும் இவை எல்லாவற்றினிமித்தமும் இறைவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி!

நாம் ஒருவர் மாறினால் நம் சமூகம் மாறும் . நம் சமூகமே மாறினால் நமக்கு என்றும் பொற்காலமே.....!

This is entry #140 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி/கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - ஜெனிற்றா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.