(Reading time: 11 - 22 minutes)

ரே அச்சில் வார்த்தது  போல இருந்தனர்..!! இரட்டையர்கள்!!!

இருவரும் இவளை நோக்கி மெல்லவர, ராகுவும் வாசலுக்கு வந்து அவர்களை புன்னகையுடன் பார்த்து 'அம்மா' என வாயசைக்க, அதை பார்த்தவர்கள் ஓடி வந்து இடுப்பை கட்டிக்க கொண்டு "அம்மம்மா" என்று ஒரு சேர சொல்ல,

வியப்புடன் அவர்களுக்கு சம்மதமா? என்பது போல ராகுவை பார்த்தாள் மஹி. புன்னகை மாறாமல் நின்றான் அவன்.

"யார் சொன்னாங்க நான் தான் அம்மான்னு?"

"அப்பா தான்" என்று அவர்கள் ரகுவை கட்டிக்கொள்ள, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹிரா.  

ன்று..

சிறையில் அவளை சந்திக்க சிறப்பு அனுமதி வக்கீலின் மூலம் வாங்கி கொண்டு அவளை சந்தித்தான் ரகு. அவனை பார்த்தவுடன் மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் சொன்னாள் மஹிரா.

திலீப் என்ன தான் மஹிராவை விரும்பி திருமணம் செய்து கொண்டாலும் முதல் நாளில் இருந்தே அவர்கள் அந்தரங்க வாழ்க்கை அவளுக்கு பிடித்தமானதாக இல்லை. அது ஒன்று தான் உலகத்தில் பெரிது என்று அவன் பேசியதும் சகிக்கவில்லை. கல்யாணம் ஆனா புதிது என்று அவளும் பெரிது படுத்தவில்லை.

ஆனால் முதல் தேன்நிலவு முடிந்த மறுவாரமே அவன் அடுத்த தேன்நிலவிற்கு நாள் குறிக்க, மெல்லிய சந்தேகம் வந்தது மஹிராவிற்கு ஆயினும் கவலை கொள்ளவில்லை அவள். ஆனால் நாளடைவில் உடலளவில் அவளை அவன் மேலும் மேலும் துன்புறுத்த சகிக்க முடியாமல் சண்டையிட தொடங்கினாள். மாதத்தில் 'அந்த' மூன்று நாட்கள் கூட அவளை நிம்மதியாக விடாமல் அவன் தொல்லை தரவே.. வீட்டினரிடம் முறையிட்டு பார்த்தாள். அனல் அவன் பெற்றோர் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

தன்பெற்றோரிடம் சொல்லவே வேதனையும் வெட்கமாகவும் இருக்க, அவளே திருத்தலம் என முயற்சி செய்தாள். அது போலவே கருவும் உற்றாள். ஏற்கனவே உடல் பலவீனமாக இருந்ததால் மேலும் எதுவும் வேண்டாம் என மருத்துவரும் எடுத்துக் கூறியும் கேட்காமல் திலீப் அவளை துன்புறுத்த கரு கலைந்தது!!!!

ஆனால் சில மாதங்களுக்கு பின் அவள் இரண்டாம் முறை கருவுறும் பொது வேண்டுமென்ற அவள் கருவை தன் மருத்துவ தோழி ஒருத்தியின் உதவியுடன் அவன் செய்து முடிக்க, அதுவும் தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்தாள் மஹிரா. இதன் இடையே ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத சமயம் பல பெண்களுடன் அவன் தொடர்பு வைத்து கொண்டதற்கான ஆதாரங்களாக அவன் டைரி, புகைப்படங்கள், மற்ற பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் காணொளிகள் யாவும் அவளுக்கு கிடைக்கவும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள் மஹிரா. இப்படி ஒரு சதை பைத்தியம் பிடித்த கொடூரனிடம் தன்வாழ்வை அழித்துக் கொண்டோமே என்று மருகியவள்.

அவன் வீடு வந்ததும் சண்டை போட துவங்க, அவனும் பதிலுக்கு எகிற, கோபத்தில் அவளுடைய கருவை கலைத்த உண்மையையும் கொட்டி தீர்த்தான் திலீபன்.

அதன் விளைவாக அருகில் அலங்காரத்திற்காக வைத்திருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து உடைத்து அவனை குதி கிழித்து கொன்று விட்டு நேரே ரகுவிடம் வந்து விட்டிருந்தாள். அதற்கும் காரணம் சொன்னாள்.

முதல் கரு கலைந்த பின் ஒரு நாள் கல்லூரி தோழியை கண்டவள், அவள் ரகு உன்னை ஒரு தலையாய் காதலித்தான் என்று கூற கேட்டதே காரணம். அப்போது அவளிடம் முகவரியை மற்றும் பெற்று கொண்டு ஏதும் பேசாமல் வந்துவிட்டாள்.

அவள் அனைத்தையும் சொல்லி முடிக்க சொல்லில் அடங்க துயரும் வேதனை அருவெறுப்பு என மொத்த கலவையாய் உணர்வுகள் விரவி கிடைக்க கனத்த இதயத்துடன் கேட்டான் ரகு..

அதன் பின் அவளை வெளி கொண்டு வருவத்ட்ராக்கான எல்லா முயற்சியும் எடுத்து ஓராண்டுக்கும் மேலாக போராடிய போராட்டத்திற்கு பலனாக, மஹிராவிடம் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாள்..!!!!

ன்று..

பெற்றோருடன் உருக்கமான சில மணித்துளிகளை பிறகு அனைவரும் கோவிலுக்கு சென்றனர். அங்கே ஏற்கனவே முடிவு செய்தது போல, ரகு மஹிராவிற்கு திருமணம் நடந்தது..!!

யாமினி யாழினி என்ற இரட்டை சகோதரிகளின் சம்மதத்தோடு.. ரகுவின் மழலைகளின் சம்மதத்தோடு..!!

அணைத்து சடங்குகளும் முடிந்து வீடு வந்த பின்னர் தனிமையில் ரகுவிடம் வினவினாள் மஹிரா.

"உன் மனைவிக்கு என்ன ஆச்சு?"

"மனைவியா?"

"முன்னாள் மனைவி"

"அது யாரு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.