(Reading time: 11 - 22 minutes)

"கு???"

"...."

"அப்போ யாழினி யாமினி"

"தத்தெடுத்த குழந்தைங்க"

"என்னது????!!!!"

சிறு மௌனம்...

"ஆமாம்.. கல்லூரி முடிஞ்சு உடனேயே உங்கிட்ட காதல் சொல்ல உன்னை தேடிட்டு இருந்தேன் அப்போ உன்னை கண்டு பிடிக்க முடியலை"

"படிப்புக்காக வெளியூர் போய்ட்டேன்"

"ம்ம்ம், அப்போ ஒரு நாள் சாதாரணமா முழு உடல் பரிசோதனை செய்யும் போது தான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சு.. எனக்கு குழந்தை பிறக்காது.. ஆண்மை இல்லைன்னு.. அப்புறம் உன்னை அன்னைக்கு சிறையிலே வந்து சந்திச்சு நீ எல்லாமே என்கிட்ட சொன்னப்போமுடிவு பண்ணிட்டேன் தத்தெடுக்கணும்னு நீ என்னை கல்யாணம் பண்ணிக்குவான்னு ஒரு நம்பிக்கை.."

"ஒரு நாள் உங்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கினேன், ஞாபகம் இருக்க?"

"அது உன்னை வெளில கொண்டு வரதுக்கு இல்ல.. தத்தெடுக்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வக்கீல் என்னோட நண்பர்கள் உதவியோடு தத்தெடுத்தேன்.. இந்த ரெண்டு குழந்தைங்களையும் பார்த்ததும் உன் வயிற்றில் இருந்து போன ரெண்டு பேரா இவங்க இருக்கனும்ன்னு ஆசை பட்டேன்"

அவன் சொல்லி முடிக்க அழுகையினுடே அவன் தொழில் சாய்ந்து கொண்டவள்,

"உங்கிட்ட ஒன்னு சொல்லணும் அன்னைக்கு அவனை கொன்றுவேன்னு எனக்கு தெரியாது சோ இனிமேல் அவனுக்கு சுகத்தை கொடுக்க கூடாதுன்னு கருத்தடை அறுவை சிகிச்சை பண்ணிட்டு தான் வீட்டுக்கு வந்திருந்தேன்.. எதிர் பாராத விதமா கோவத்துல..."

என்று அவள் நிறுத்த, அவள் வாயை மூடியவன். கண்ணீரை துடைத்து விட்டான்.

"எல்லாமே முடிஞ்சு போச்சு" என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி..!!

This is entry #152 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ப்ரியா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.