(Reading time: 11 - 22 minutes)

2017 போட்டி சிறுகதை 152 - மலர்ச்சி..?! மறுமலர்ச்சி..!! - ப்ரியா

This is entry #152 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ப்ரியா

Protecting

ந்த மலையடிவாரத்தில் இருந்த சாலையில் சென்று கொண்டிருந்தது ஒரு ஜீப்..!! அதை ஓட்டிக் கொண்டிருந்தவன் அடிக்கடி தன் அருகில் அமர்ந்திருந்தவளை யோசனையுடனும் புன்னகையுடனும் பார்த்துக் கொண்டிருந்தான். அனால் அவளுக்கு அதிலெல்லாம் சிந்தனை இல்லை.. வெளியே தெரிந்த காட்சிகளை எல்லாம் உள்வாங்கி கொண்டிருந்தன அவள் கண்கள்.

"மஹி?" பேச்சை அவனே தொடர்ந்தான்.

",,,,"

"நீ வந்ததுல இருந்து ஒண்ணுமே பேசலை.. காலையில உன்னை பார்த்ததுல இருந்து இப்போ வரைக்கும்.. சரியாய் ஆறு மணி நேரம்.. நானும் உன் மௌனம் கலையட்டும்ன்னு பேசாம இருந்தேன் ஆனால் இதுக்கு மேல என்னால முடியலை"

"அவங்களுக்கு என்ன பிடிக்கும்ல?" அவள் உதிர்க்கும் முதல் சில வார்த்தைகள். அதிலும் அவர்களே நிரம்பி இருந்தனர்.

"கண்டிப்பாக டா, நீ ஒன்னும் ரொம்ப உன்னை வருத்திக்காத இன்னும் கொஞ்சம் நேரம் நீயே நேர்ல பார்ப்பியே?"

"ம்ம்ம்ம்" மீண்டும் மௌனமாய் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள் அவள்.

ரத்தக்கறை படிந்த உடையுடன், கையில் உடைந்த ஒரு பாட்டிலும் ஒரு காலில் செருப்புமாக இரண்டு வருடத்துக்கு முன் அவள் கதவை தட்டும் போது அதிர்ந்து தான் போயிருந்தான் அவன்.. அப்போதும் அவள் ஏதும் பேசவில்லை... அதன் பின் இந்த இரண்டு வருடங்கள் நடந்தவை??!! இப்போதும் அதே போல தான் இருக்கிறாள். அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வண்டியை செலுத்தினான் ரகு..!!

அவர்கள் அந்த வீட்டை அடைந்த போது இருட்டி இருந்தது.. வீட்டினுள் நுழையும் முன் தன்னை சிறிது நேரம் தனிமையில் விடும்படி அவள் கேட்டுக் கொள்ள, அவளை முன்னே செல்ல அனுமதித்து சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தான் ரகு.

மஹிரா வந்த வழியே சிறிது தூரம் சென்று வேறு பாதையில் திரும்பி குன்று போன்றிருந்த இடத்தில இருந்து அதன் அடிவாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதை அசை போடுகிறாள் என்று புரிந்து இருந்தது ரகுவிற்கு. அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் இருந்து இன்னொரு குன்றில் ஒரு காதல் ஜோடி எதிரொலியை கேட்டு குதூகலித்து கத்தி கொண்டிருந்தார்கள். அந்த பெண் "ஐ லவ் திலீப்" என்று உரக்க கத்த சட்டென திரும்பிய ரகு அவசரமாய் மஹிராவிடம் பார்வையை திருப்பினான்.

அவள் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அதிர்வு தோன்றி மறைந்தது. திலீப்.. திலீபன்.. அவள் கணவன்!!

ன்று..

கதவு தட்டப்படும் ஒலி கேட்டு ரகு கதவை திறக்க, ரத்தக்கறையுடன் மஹிரா நின்றிருந்தாள். கையில் உடைந்த பாட்டில்.. முதலில் அதிர்ந்தவன் பின் பயந்து ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அவளை உள்ளிழுத்து கதவை சாத்தினான். 

"என்னமா ஆச்சு? மஹி மஹிரா?"

"....."

"உனக்கு ஏதாவது அடி பட்டுச்சா? ஏதாவது பிரச்சனை? என்னடா? சொல்லு மா?"

"....."

எதற்கும் பதிலில்லை அவளிடம். சரியாக அவனின் இருபது நிமிட போராட்டத்திற்கு பிறகு விடை கிடைத்தது.. அவளிடம் இருந்து அல்ல!! போலீஸ் அவன் வீடு கதவை தட்டியபோது!!

அவர்கள் மஹாராவை கைது செய்து அழைத்து செல்ல, அவர்களுடன் என்ன எது என்று அறியாமல் இவனும் அழைத்து செல்லப்பட்டான். நேராக அவர்கள் சென்றது மஹிராவின் வீட்டிற்கு. வீட்டில் அனைத்தும் அங்கும் இங்குமாய் சிதறி கிடைக்க, படுக்கையறையின் ஓரத்தில் மஹிராவின் கிழிந்த உடைகளுக்கு நடுவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திலீபன்.

அதிர்ச்சியின் உச்சியில் இருந்தான் ரகு..

அவளே காவல் துறைக்கு தொடர்பு கொண்டு தான் கொலை செய்ததாக கூறியதாகவும், ரகு வீட்டிற்கு செல்வதாகவும் அவன் விலாசத்தையும் தந்ததாகவும் காவல் அதிகாரி சொல்லி விட்டு செல்ல தலை கால் புரியாமல் குழம்பி போனான் ரகு.

அவனுக்கு மஹிராவை நன்றாக தெரியும். மஹிரா ரகுவின் வகுப்பு தோழி. திலீபன் மஹிரா கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. காதல் திருமணம் இல்லை என்றாலும் ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை செய்ததால் இருவருக்கும் பிடித்து பொய் பெற்றோரும் பார்த்து வைத்து நடந்த திருமணம்!!

கல்லூரி ஆண்டுகளுக்கு பிறகு, மஹிராவை ரகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் அவளுக்கு திருமணம் ஆனா பொழுதில் ஒரு தரம் அவள் ஊட்டிக்கு வந்திருந்தாள். இரண்டாம் தேன்நிலவிற்காக..!! அவ்வளவு காதல் இருவருக்கும் இடையில் என்று நம்பி இருந்தான். அப்போது தான் திருமணத்தை பற்றியும் திலீபனை பற்றியும் வாய் வலிக்க சொல்லி சொல்லி மாய்ந்து போனாள் மஹிரா. அவள் எப்படி? எங்கேனும் தவறு நடந்திருக்குமோ என்று யோசித்து யோசித்து தலை வெடித்தது அவனுக்கு. ஆனால் விடை சொல்ல எவருமில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.