ஊருக்கு கிளம்புவதற்கு முன் நாள் மாலை,
நான் அப்பாவிடம் “அப்பா...
என்னம்மா வேணி ?
வயலின் வாசிக்கிறதில்லையா இப்போல்லாம் ?
இல்லம்மா.. வாசிச்சா உன் ஞாபகம் வந்துடும் அதான்.
இந்தாங்கப்பா.. வயலினை எடுத்து நீட்டினேன்.
வாசிங்கப்பா ! எனக்கு பிடிச்ச மோகன ராகம் வாசிங்கோ..!
அப்பா வயலினை வாங்கி, வாசிக்க தொடங்கினார்.
கேட்க.. கேட்க.. கண்கள் மூடி ரசித்தேன். மனம் ஆனந்தம் பேரானந்தம் கொண்டது.
இனிமே தினமும் வாசிங்கோப்பா. தலையாட்டினார்.. கண்ணீரோடு..
மறுநாள் சென்னை வந்தோம்.
வீடே மாறி இருந்தது. அத்தையின் துணிமணி படுக்கை எல்லாம் மாடிக்கு.
சமையலும் அங்கேயே..
நான் அவரைப் பார்த்தேன். “நேக்கு ஒன்னும் தெரியாது” என்றார்.
மறுநாள் மாலை வழக்கம் போல் டி.வி.யில் சீரியல் வைத்தேன்.
அத்தை “பொதிகையில் வயலின் கச்சேரி போறது, வைம்மா” . வைத்தேன்.
இரவு எங்கள் அறையில்..
அருகில் வந்த கணவரிடம் ,
என்ன?
ம்.. உன் பொண்ணுக்கு தம்பி பாப்பா வேணுமாம்.என்றார்..
விழித்துக்கொண்டு இருந்த மகள் "அப்பா பொய் சொல்லாத. நான் மாடிக்கு போறேன்". பாட்டி கூட தூங்க.
நான் சிரித்துக் கொண்டேன்.
கண்கள் மூடி சுந்தருக்கு நன்றி சொன்னேன்.
அப்பா வாசித்த மோகன ராகம் காதில் ஒலித்தது.
{kunena_discuss:785}