(Reading time: 6 - 11 minutes)

இப்பொழுது அஸ்வினது பார்வை நித்தியிடம் சென்றது,அதை சளைக்காமல் எதிர்க் கொண்டவள்,”என்ன மாமா அப்படி பாக்குறிங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமா,என்ன மாதிரி சின்ன பொண்ண வச்சிக்கிட்டு கண்ணாலே பேசிக்கிறீங்க..,சைகை பாஷை வேற..”என்ற நித்திக் கூற

அவளை முறைத்தவன்  நாம பாட்டிய வச்சி தான் இவங்கள அடக்கணும் என்று யோசித்தான்.”நித்தி வேணுனா சொல்லு நம்ப பாட்டி உனக்கு ஏதோ ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்க நான் ஓகே பண்ண சொல்லிட்டா..”என்று அஸ்வின் கேட்க இப்பொழுது அவனை முறைப்பது நித்தியின் முறையானது..

நமக்கும் இவன் ஆப்பு வைத்துவிடுவான் என்று சதிஷும் அதற்கு பிறகு அவர்களை ஒன்றும் குறைவில்லை.

கவி தனது தனி உலகத்தில் சந்தோஷமாய் இருந்தாள்.அஸ்வினது ஓவ்வொரு செயலும் அவளுக்கு இனிமையாய் இருந்தது.அவனது கண்ணசைவு கூட அவள் உயிர் வரை தீண்டி சென்றது.அவளது பெண்மையை அது உணர செய்தது. அவளுக்கு மட்டும் அல்ல அஸ்வினுக்கும் அந்த உணர்வுகள் பிடிக்க தான் செய்தது.

காதல் வானில் பறக்க இருவரும் காத்திருக்கின்றனர்..

உன் கண் பேசும் மொழிகள்

கூட என் உயிர் வரை தீண்டி

செல்கிறதே..

இது தான் காதலா

உன் ஒரு தலை அசைப்புக்கு

இந்த பெண் மனம் ஏங்குகிறதே

இது தான் காதலா..

இந்த உணர்வை உன்னிடம்

மட்டுமே உணர்கிறேனே

இது தான் காதலா....

aeom

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.