(Reading time: 13 - 26 minutes)

17. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

ந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் புரிந்துவிட்டது அஸ்வின் கோபமாக உள்ளான் என்றும் அந்த கோபத்திற்கு காரணம் கவி என்பது அவனது கரங்களில் கிடந்த அவளது கரமே அவர்களுக்கு கூறியது.

உள்ளே வந்த அஸ்வின் அவனது தாத்தாவிடம் நேரே சென்றான்.”தாத்தா இவ என்ன காரியம் செய்திருக்கா தெரியுமா..” என்று அவரிடம் முறையிட்டான் அஸ்வின்.

ஏற்கனவே அவளை பிடிக்காமல் இருக்கும் ஆனந்திக்கும்,பர்வதம்மாளும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று கவனமாக கவனிக்க ஆரம்பித்தனர்.

“என்னடா எதுக்குடா..இவ்வளவு கோபமா இருக்க இப்ப மலர் என்ன பண்ணா..,அவளை அடிச்சியா..”என்றுக் கேட்டுக் கொண்டே வந்தவர் கவியின் அருகில் வந்து அவளை அவனது பிடியில் இருந்து விடுவித்து தனது அருகில் நிறுத்திக் கொண்டார்.

“இவ என்ன செஞ்சானு சொன்னா நீங்களே கோப படுவிங்க..”என்றுக் கூறியவன் இதுவரை நடந்தவற்றை அவரிடம் கூறினான்.

அதை கேட்டுக்கொண்டிருந்த பர்வதம்மாள்,”அதான பார்த்தேன் அந்த வீட்டுல பிறந்த இவ மட்டும் நல்லவளா இருப்பாளா..,நம்ப வீட்டுல இவ வேண்டுமுனே நுழஞ்சிருப்பா..,ஏற்கனவே நம்ப குடும்பத்த அவமான படுத்துனது பத்தாதுன்னு இவளையும் இங்க அனுப்பி இருக்காங்க..,அவங்களுக்கு நாம என்ன செஞ்சோம்,ஏற்கனவே ஒரு பொண்ண அனுப்பி என் பையன பரிச்சது பத்தாதுனு இப்ப இவளை அனுப்பி என்ன செய்ய இருக்காங்க..”என்று அவர் புலம்ப புலம்ப அஸ்வினுக்கு கவியின் மீது இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது.

அவரை தொடர்ந்து ஆனந்தியும் பேச ஆரம்பித்தார்.

“இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் அவளுக்கு தாலி கட்டிட்டு அப்படியே அவளை அங்கே விட்டுட்டு வானு சொன்னேன் நீ கேட்டியா..,நான் உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லியும் உனக்கு அவ தான முக்கியமுன்னு,அவ என்னோட மனைவி அவ இனிமே என் கூடதான் இருக்கனுமுனு அப்படி இப்படி வசனம்லாம் பேசுன..”என்று ஆனந்தியும் தன் பங்கிற்கு கூற அவனுக்கு இன்னும் கோபம் தான் அதிகம் ஆனது.

அதுவரை அமைதியாக இருந்த ஞானசமந்தம் பேச ஆரம்பித்தார்,

“அதுக்குனு சின்ன பொண்ண அடிப்பியா அஸ்வின்..”என்றுக் கேட்க

“அப்படியில்ல மாமா,நான் கல்யாணம் முடிஞ்ச உடனே அவ கிட்ட சொல்லிதான கூப்பிட்டு வந்தேன் அப்படி இஷ்டம் இல்லதாவ எதுக்கு என் கூட வந்தா..”என்றுக் சொல்ல

“அது எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது அவங்க அவளோட குடும்பம் தானடா அவளோட இத்தனை வருட வாழ்க்கைய அவங்க கூட தான் வாழ்ந்திருக்கா அவளோட விருப்பம் வெறுப்பு எல்லாம் அவ சொல்லி தான் உனக்கு தெரிய போது,அவங்க அவளோட விருபத்த அவ முக மாற்றத்தை வச்சியே கண்டு புடிசிருப்பாங்க இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ஒரே நாள்ல அதையெல்லாம் விட்டுட்டு வர முடியுமா..”என்று அவனை கேட்க ஆரம்பித்தார் அவனின் தந்தை தியகராஜ்.

அதுவரை அமைதியாக இருந்த ஜனார்த்தனன் சொன்ன பதிலில் அங்கு இருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஸ்ம்பித்தனர்.

“எனக்கு தெரிஞ்சிதான் மலர் போனா,அதுவும் அவ மட்டும் போல சதீஷும் அவ கூட போனான்..”என்றுக் கூற இப்பொழுது அனைவரின் பார்வையும் சதீஷை நோக்கி சென்றது.அவனோ கையில் ஒரு பாக் உடன் நின்றிருந்தான்.

அஸ்வின் அவனை கேள்வியாகப் பார்க்க சதீஷ் ஆமாம் என்பது போல் கண்ணசைக்க அஸ்வின் தாத்தாவை பார்த்து,”எதுக்கு தாத்தா அவ இப்ப அவங்களப் பார்க்கப் போனா நன் தான் அங்கே இருந்து எதுவும் எடுத்துக் கிட்டு வரக்க கூடாதுன்னு சொன்னன்ல அப்பறம் என்ன எடுத்துக் கிட்டு வர சொன்னா,இந்த பாக்ல என்ன இருக்கு..”என்று அவன் சதீஷை நெருங்க.,

அதற்குள் ஜனார்த்தனன் தாத்தா,“அவளோடையே எல்லா தேவையையும் நீ நிறைவேத்த முடியும்.ஆனா,அவ இவ்வளவு நாள் படிச்ச சர்டிபிகேட் அவளோட தனி திறமைகளுக்குனு கிடைச்ச பரிசு இத எல்லாம் உன்னால தர முடியுமா.,அடுத்த வாரத்தில் இருந்து அவ காலேஜ் போணும் அதுக்கு அவளோட புக்ஸ் மத்த திங்க்ஸ் எல்லாம் வேணும் நான் விஷ்வா கிட்ட சொல்லி எடுத்துகிட்டு வர சொல்லவா நான் கூட போகல சதீஷ் அண்ணாவ போய் வாங்கிகிட்டு வர சொல்லுங்க, அப்படின்னு சொன்னா நான் தான் நீயும் சேர்ந்து போய் வாங்கிட்டு வாம்மானு சொன்னேன்..”என்று அவர் சொல்ல

“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருக்கலாம்ல தாத்தா..”என்று தாத்தாவிடம் கூறினான் அஸ்வின்.

“உன்கிட்ட சொல்லிட்டு போறதுக்காக தான் வீட்டு நம்பர்லிருந்து உன்னோட மொபைலுக்கு கூபிட்ட,அவளோட நம்பர்லிருந்தும் கூபிட்ட நீ தான் எடுக்கவே இல்லை..”என்று அவர் கூற அவனுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது ஒரு புது நம்பர்லிருந்து தனக்கு அழைப்பு வந்திருந்தது என்பதே..,வீட்டு நம்பர்க்கு அவன் கால் பண்ணப்ப ஜானகி எடுத்தாங்க அவங்க கிட்ட கேட்டப்ப அவங்களுக்கு யார் பண்ணதுனு தெரியல அதனால அவன் அத அப்படியே விட்டுவிட்டான்.

அவர் கூறிய பின் தன் மீதுதான் தவறு உள்ளது என்பதை புரிந்துக் கொண்டவன் அவளிடம் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு வேண்டினான்.கவி அவனிடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை,இதை அவளது கண்களே அவனுக்கு காட்டி கொடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.