(Reading time: 13 - 26 minutes)

அவன் அருகில் வந்த அவனது தந்தை “இனிமே கோபம் வரப்ப எல்லாம் பொம்பள புள்ளைய அடிக்காத..,உனக்கு தங்கச்சி இல்லமா இருக்கலாம் ஆனா நீ ஒரு பெண் குழந்தையோட தான் வளர்ந்த அதை மறக்காத..”என்றுக் கூறி விட்டு சென்றார்.

அனைவரும் அவர்களது வேலையை பார்க்க சென்றனர்.சதிஷிடம் இருந்து தனது பாக்கை வாங்கியவள் தங்களது அறைக்கு சென்றாள்.

அவள் சென்ற உடன் அவனது அருகில் வந்த சதீஷ்,”நீ இப்படி செய்வனு எதிர்பார்க்கல மச்சான்.,ஆகாஷும் அந்த தாத்தாவும் ரொம்ப பீல் பண்ணாங்க..,அந்த தாத்தா என்கிட்ட சொன்னாரு மலர் சின்ன வயசிலேருந்து பாசத்துக்கு ஏங்கி வளர்ந்த பெண்ணாம்,சின்ன வயசுலேருந்து ஹாஸ்டல தான் வளர்ந்தாளாம்..,அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ..,உன்னோட கோபம் புரிது அவ பிறந்தே இருக்காதப்போ அவ எப்படி மச்சான் பெரியவங்க செஞ்ச தப்புக்கு காரணம் ஆவா..”என்று கூறி விட்டு சென்று விட மனதில் பல வித எண்ணங்களுடனே தனது அறைக்கு சென்றான்.

அவனது அறையில் அவனது மனைவி இல்லை.அந்த நிகழ்விற்கு பிறகு இரவு உணவின் போதுதான் அவன் அவளை பார்க்க முடிந்தது.அதுவும் அவனது தாத்தா அழைத்த பிறகு தான் உணவு உண்ணவே வந்தாள்.அனைவரும் உணவு உண்டுவிட்டு உறங்க சென்றுவிட்டனர். அஸ்வினும் தனது அறைக்கு சென்று விட்டான்.அவன் கவியின் வரவை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.சதீஷ் அவ்வாறு கூறியது,அவன் அவளை அடித்தது இவை அனைத்தும் சேர்ந்து அவனை அலைக்கழித்தது.அவள் பாசத்திற்கு ஏங்குகிறாள் என்று சதீஷ் கூறியது உண்மையே என்று அவனுக்கு தோன்றியது.அவள் அவனது ஜானகி அத்தையிடமும்,நித்தி,தாத்தா,சதீஷ் அனைவரிடமும் இந்த இரு நாட்களில் நன்கு பொருந்திவிட்டாள்.இதையெல்லாம் அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவன் ஒன்றை யோசிக்க மறந்து இருந்தான்,அவ்வளவு உறவுகள் இருந்தும் அவள் ஏன் பாசத்திற்காக ஏங்குகிறாள் என்பதை அவன் அப்பொழுது யோசிக்க ஆரம்பிக்கவில்லை,யோசித்து இருந்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்து இருக்கலாம்...

கட்டிலில் படுத்திருந்தவன் கதவு திறக்கவும் தூங்குவது போல் நடித்தான்.உள்ளே வந்த கவி அவன் உறங்குகிறான் என்று நினைத்துக் கொண்டு கட்டிலின் மறு ஓரம் படுத்துக் கொண்டாள்.

படுத்தவளுக்கு உறக்கம் தான் வர மறுத்தது.தனக்கு என்று தனது மேல் அன்பு செலுத்தும் தனக்கு கிடைக்காதா என்று கவி ஏங்காத நாளில்லை.அவளது வாழ்க்கையில் அவளுக்கு அதை தர இருந்த ஓர ஒரு வழி அவளது திருமணமே அதுவும் இவ்வாறு முடிந்து விட

aeom

அவளுக்கு அதுவே தன்னிரக்கதை ஏற்படுத்த அவளது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் உறங்கிவிட்டாள் என்று நினைத்து அவள்புறம் திரும்பிய ஆகாஷ்.அவள் முதுகுகுலுங்குவதைப் பார்த்த அவனுக்கு அவள் அழுவது புரிந்தது.எழுந்து விளக்கை போட்டான் அஸ்வின்.திடீர் வெளிச்சத்தில் தனது அழுகையை நிறுத்தி கண்ணை திறக்க கவி முயற்சி செய்ய அந்த வெளிச்சம் அவளின் கண்களை கூச செய்தது.

விளக்கை போட்டுவிட்டு அருகில் வந்த அஸ்வினிற்கு அவளது செயல் சின்ன குழந்தைகளின் செயலை ஞாபகப்படுத்தியது.அவளது செயல் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும்,அவளை இப்பொழுது சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தான் அவன்.

“மலர் எழுந்திரு..”என்ட்ரி அவள் அருகில் அமர்ந்தான் அஸ்வின்.

அவளும் கண்ணை கசக்கி ஒரு வழியாக எழுந்து அமர்ந்தாள்.இப்ப எதுக்கு இவன் நம்பல எழ சொல்லுறான் நாம அழுததால இவனோட தூக்கம் ஒருவேளை கலைந்து போச்சோ,அய்யோ காலையில இவன் அடிச்ச அடியோட வலியே இன்னும் குறையல இதுல இப்ப இவன் என்ன பண்ண போறானு தெரியலயே,என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க..அஸ்வின் பேச ஆரம்பித்தான்.”சாரி கவி..”என்று அவன் கூறியதும்,என்னடா இவங்க வீட்டுல எல்லாரும் மலருனு கூப்பிடுறாங்க இவன் மட்டும் எதுக்கு என்ன இப்ப கவினு கூப்பிடுறான் என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.அவனுக்கு மட்டும் தானே அதன் காரணம் தெரியும்..,மலர் என்று அவளை அழைத்தாள் அவளின் மேல் கோபம் மட்டுமே தனக்கு வரும் என்பதால் அவன் அவளை கவி என்று அழைத்தான்.ஆனால் அவன் அவ்வாறு அழைத்ததும் அவளுக்கு அவளது சொந்தங்கள் தான் ஞாபகம் வந்தது.

“எதுக்கு இவன் சாரி கேக்குறேனு பாக்குறீயா..,காலையில உன்ன அடிச்சதுக்கு தான்,நான் உன்ன அவங்கக் கூட பார்த்ததும் எதையும் யோசிக்கவில்லை,என்னோட பேச்சை நீ மீரிட்ட அப்படிங்கறது மட்டும் தான் என்னோட மைன்ட்ல இருந்துது,அதனால தான் நான் அப்படி நடந்துகிட்டேன்..,நான் எதுக்கு இப்ப உன்கிட்ட என்பக்க நியாயத்தை சொல்றேனா.,வாழ்நாள் முழுக்க உனக்கு நான் எனக்கு நீனு வாழப் போற பந்தத்துல இணைஞ்சிருக்கோம்,அதனால தான் நான் இப்ப உன்கிட்ட இதெயெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.எனக்கு உன் குடும்பத்த பிடிக்காது,எனக்கு மட்டும் இல்ல என்னோட வீட்டுல..,சாரி நம்ப வீட்டுல இருக்குற பாதி பேருக்கு உன்னோட வீட்டு ஆளுங்களப் புடிக்காது..,அதனால அவங்க மேல இருக்கற கோபத்தை உன் மேல தான் காட்டுவாங்க,அதுவும் பாட்டியும் என்னோட அம்மாவும் தான் அதிகமா காட்டுவாங்க அத நீ பொறுத்துக்கிட்டு தான் ஆகனும் அவங்களோட வலி அப்படி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.