(Reading time: 13 - 26 minutes)

எனக்கும் அத நினைச்சா உன் மேல கோபம் வரும்,ஆனா என்ன பண்றது ஆண்டவன் இப்படி நம்பளோட தலையெழுத்த எழுதிட்டான்,இந்த இருபதாம் நூற்றாண்டுல இதுலாம் ஒரு பெரிய உறவு இல்ல,இருந்தாலும் இதுக்கெல்லாம் இன்னும் மதிப்பு கொடுத்து வாழறவங்க இருக்காங்க..,அதனால நாமளும் ட்ரை பண்ணலாம் சேர்ந்து வாழ...ஓகே உன்னோட புக்ஸ் எல்லாம் என்னோட ஆபீஸ் ரூம்லே வச்சிட்டு அதையே நீ யூஸ் பண்ணிக்கலாம்.புரிதா.. நீ எதாவது சொல்லணுமா..”என்றுக் கேட்க அவன் நிகழ்த்திய பெரிய உரையில் அவனை அவள் மெய்மறந்துப் பார்த்துகொண்டிருந்தாள்,அவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை யோசிக்க வைத்தது.தனது யோசனையில் இருந்தவள் அவன் கடைசியாக கேட்ட கேள்விக்கும் தனது தலையை இட வலமாக ஆட்டினாள்.அவளது இந்த செயலை பார்த்தவன் அவளது முன் நெற்றியில் இருந்த முடிக் கற்றையை ஒதுக்கி முத்தமிட்டான்.அந்த முத்தத்தில் காதல் இல்லை காமம் இல்லை,தனக்கு தெரியாதா இடத்தில் தொலைந்து போன ஒரு குழந்தையை அரவணைக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வை அவளுக்கு தந்தது.அவன் தந்த முத்தத்தில் அவள் இன்று தனது தாயை உணர்ந்தாள்.அந்த நினைவில் அவள் கண்கள் கலங்கியது.

“எதுக்கு இப்ப அழுகுற நம்ப லைப நாம வாழ்ந்துதான் ஆகணும்.வாழ்கைய நாம பேஸ் பண்ணிதான் ஆகணும்..”என்று அவன் கூற அதுவரை அமைதியாக இருந்த அவள் வாழ்கையை எதிர்கொள்ள தயங்குவதாக கூற இதுநாள் வரை தனியாக இருந்து அதை எதிர்க் கொண்டு இருந்தவளுக்கு அது கோபத்தை ஏற்படுத்த அவனுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தாள் கவி.

“நான் அதுக்கு ஒன்னும் அழுகுல..,நீங்க அப்படி கிஸ் பண்ணதும் எனக்கு எங்க அம்மா நியாபகம் வந்துடுச்சு..,அவங்களும் அப்படிதான் அவங்க இருந்த வரைக்கும் இப்படி கிஸ் பண்ணிட்டுதான் என்ன தூங்க வைப்பாங்க..,அதான்..”என்றுக் கூற அவன் அவள் சொன்ன பாதியை மட்டும் கவனித்து மீதிக்கு அவள் செய்த எக்ஸ்ப்ரசனை மட்டுமே தான் பார்த்தான்.அதனால் அவள் சொன்ன முக்கிய விஷயத்தை கவனிக்க மறந்தான்.

“சரி ஓகே படுத்து தூங்கு நீ தையிரியசாலி தான்..,தூங்கு”என்றுக் கூற அவள் படுத்துக் கொண்டாள்.அவனும் லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து படுத்தான்.

அரைமணி நேரம் ஆகியும் கவி தூக்கம் வராமல் அசைந்துக் கொண்டே இருந்தாள்.அவளது அசைவுகள் அவனையும் தூங்க விடாமல் செய்தது.

அவள் புரம் திரும்பியவன் “தூங்கலையா இப்படி பிரண்டு பிரண்டு படுத்தா என்னாலையும் தூங்க முடியாது..”என்று அவளிடம் கேட்க

கவியோ “எனக்கு தூக்கம் வர மாட்டங்குது..,நான் வேணா கீழ படுத்துகுறேன்.நீங்க தூங்குங்க..” என்று கூறிக் கொண்டு அவள் எழ முயற்சிக்க ,

அவளை தடுத்தவன்..”இங்கயே படுத்துக்கோ ஆனா இப்படி படுத்துக்கோ”என்றுக் கூறி அவளை தனது கைவளைவில் கொண்டு வந்தவன்

“இப்ப தூங்கு நல்லா தூக்கம் வரும்..” என்றுக் கூறி தனது கண்களை மூடிக் கொண்டான்.

கவி பிறந்ததில் இருந்து தந்தை அணைப்பை உணர்ந்ததில்லை,இருபது வயதில் உணர்ந்தாள் தந்தை அணைப்பு இப்படி தான்

இருக்க என்று தனது கணவனின் அணைப்பில்..

அது கொடுத்த பாதுகாப்பிலேயே அவள் உறங்க ஆரம்பித்தாள்.

டுத்தநாள் காலையில் எழந்தவன் தனது கை அணைப்பில் தூங்கும் கவியை தான் பார்த்தான்,அவன் அவளது தலையை தலையணையில் வைத்தான்,அதுவரை அதில் தந்தையின் பாதுகாப்பு உணர்வை உணர்ந்துக் கொண்டிருந்தவள்,அது தொலைந்ததும் அப்பா எங்க போறீங்க என்றுக் கேட்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவள் இரவு முழவதும் படுத்ததாள் மறுத்து போன கையை அசைத்து அதை சரிசெய்துக் கொண்டிருந்தான்.

காலையில் எழந்த கவிக்கு இப்பொழுது அந்த வீடே அவளது வீடுபோல் உணர்வை தந்தது.

அவளுக்கு இப்பொழுது அஸ்வின் நல்ல தோழனாக தெரிந்தான்.நேற்று அவன் பேசிய பேச்சுகள் அவளுக்கு ஒரு புதிய தெம்பு தானாக வந்தது.

எழுந்தவள் அவனை தான் முதலில் தேடினாள்,ஆனால் அவன் அங்கு இல்லை.மணியை பார்க்க அது எட்டை தாண்டி இருந்தது.

கீழே அவள் இறங்கி வரும் பொழுது ஹாலில் அமர்ந்திருந்த பர்வதம்மாள்,”ஆனந்தி உன்னோட மருமகள நல்லா பார்த்துக்கோ..,எவ்வளவு சீக்கரம் எழுந்து எல்லாருக்கும் டிகிரி காபி போட்டுக் கொடுத்துட்டா..,மணக்க மணக்க இட்லி,பொங்கல் கூட செஞ்சு வச்சிட்டா..,நீ நல்லா கொடுத்து வச்சவ..”என்று அந்த கொடுத்து வைத்ததில் நன்கு அழுத்தம் தந்தார் அவர்.

அதை கேட்ட கவிக்கு கோபம் வரவே இல்லை,நேற்று அஸ்வின் சொன்னதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது.அதனால் அவள் அமைதியாக அந்த இடத்தை கடந்து ஜானகியிடம் சென்றாள்.

ஜானகி அவளை ஒவ்வொரு செயலிலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.நித்தியுடனும்,சதீஷ் உடனும் கதை அடிக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

தனது காலை நடைபயணத்தை முடித்துக் கொண்டு அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான் அஸ்வின்.இன்று அவள் அவனை ஒண்டி உறங்கியதால் அவனால் என்றும் எழும் நேரத்திற்கு எழ முடியவில்லை.அதனால் அவன் அவசர அவசரமாக கிளம்ப ஆரம்பித்தான்.இருந்தாலும் தனது பாட்டியும்,அன்னையும் பேசிக்கொண்டதை கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

அதை அவள் கவனித்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததே மனசுக்கு நிறைவாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.