இரவு தான் பேசியது அவளை பாதித்துள்ளது,அதை அவள் பின் பற்றுகிறாள் என்பதே அவனுக்கு சந்தோசமாக இருந்தது.தனது வாழ்க்கை எந்த வித பிரச்னையும் இல்லாமல் வாழ முடியும் என்று நினைத்தான் அவன்.தனது அலுவலகத்திற்கு லேட்டாக அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவன், கவியிடம் கண்களால் விடைபெற்றான்.
அவனது அந்த செயல் கவிக்கு தனது வாழ்க்கை தான் நினைத்தது போல் அன்பான கணவனுடன் தான் அமைந்துள்ளது என்று நினைத்து சந்தோஷ வானில் பறந்தாள்.
தனது கணவன் என்றும் தன்னை கைவிட மாட்டான் என்று நினைத்தவளுக்கு அப்பொழுது தெரியவில்லை தான் தான் அவனை விட்டு செல்வோம் என்று..
அவர்களது வாழ்க்கையில் அடுத்து நிகழப்போவது என்ன....
என்னவனின் முதல் அணைப்பு
எனக்கு காதலை உணர்த்தவில்லை
தந்தையின் பாதுகாப்பை தந்தது
அவனது முதல் முத்தம்
என் இளமையின் உணர்வுகளை
தூண்டவில்லை.
அன்னையின் அன்பை உணர்த்தியது
நேசிக்கிறேன் என்னவனே
உன்னை என் கணவனாக மட்டும்
அல்லாமல் தந்தையாகவும்
தாயாகவும் பார்க்கிறேன்
அனைத்து உறவுகள்
இருந்தால் என்ன
அந்த அனைத்து உறவையும்
நீ ஒருவனாய் எனக்கு தருவாயா..
வரம் வேண்டி நிற்கிறாள்
பேதை இவள் மறுக்காமல்
தந்துவிடு......
தொடரும்
{kunena_discuss:1099}