(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 06 - சகி

Uyiril kalantha urave

ன்று சனிக்கிழமை...!

தாயின் கட்டாயத்தால் சந்திக்க வேண்டியவனை சந்திக்க, சந்திக்க வேண்டிய இடத்தில்,சந்திக்க மனமே இல்லாமல் அமர்ந்திருந்தாள் சிவன்யா. விழிகளுக்குள் ஆயிரமாயிரம் பிம்பங்கள்!!!என்ன செய்வாள் அவளும்??அவனை காணாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?விதி எழுத்துகள் மூலம் சதி செய்து ஏன் இருவரையும் இணைக்க வேண்டும்???அப்பெண்ணின் மனம் விதியை (என்னை) சபித்தது. 

"மேடம்!யுவர் ஆர்டர் ப்ளீஸ்?"-பணிவுடன் வினவினான் பணியாளன்.

"கொஞ்ச நேரம் போகட்டும்!"

"ஓ.கே மேடம்!"-சென்றுவிட்டான் அவன்.

"பயப்படாதே சிவா!இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை...சமாளிக்கலாம்!"-தனக்கு தானே ஆறுதல் புகட்டினாள்.ஆனால்,மனமோ அச்சத்தால் சாந்தமடைய மறுத்தது.அவள் இதயத்துடிப்பின் ஒலி,அந்த இரைச்சலிலும் தெளிவாய் கேட்டது அவளுக்கு!!!

"சிவன்யா?"-தன்னருகே ஒலித்த குரலால் சில நொடிகள் தடுமாறினாள் அவள்.கலக்கத்துடன் தவித்த மனதினை நொடியில் சமாதானம் செய்தவள்,குரல் வந்த திசை நோக்கி திரும்ப,நின்றிருந்தான் அவன்.

விழிகள் அவன் முகத்தினை உள்வாங்கியதும் இருந்த படபடப்பு அனைத்தும் மறைந்தது.மனதுள் ஒரு வித ஆறுதல் படர்ந்து,இயல்புநிலைக்கு வந்தாள் அவள்.காரணம் எல்லாம் ஒன்றுதான்,அவன் சூர்யா அல்ல அசோக்!!!

"சார் நீங்களா?"

"யா!என்ன இங்கே தனியா உட்கார்ந்திருக்கீங்க?"-என்றப்படி அவள் எதிர் அமர்ந்தான் அவன்.அவளிடத்தில் பதில் இல்லை.

"என்னாச்சுங்க?நான் ஏதாவது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"இல்லை....அதெல்லாம் இல்லை!"-அவன் முகம் நோக்கவே முடியாமல் திணறினாள் அக்கன்னிகை.

"யாருக்காகவாது வெயிட்டிங்கா?"

"அது...."-எப்படி கூறுவேன் என்றது மனம்.சில நொடிகள் அவள் மௌனம் காத்த சமயத்தில் மீண்டும் ஒலிக்கப்பட்டது அவள் பெயர்!!

"சிவன்யா?"-இம்முறை அது அவன் தான்...!!அழைத்தவனை புரியாமல் பார்த்தான் அசோக்.

"நீங்க?"

"ஐ ஆம் சூர்யா!சூர்யா சந்திரசேகர்!பெண் பார்க்க வருவதற்கு முன்னாடி,பெட்டர் உங்களை பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் இந்த மீட்டிங்!"-யாதும் புரிந்தவனுக்கு அவன் உலகத்தில் ஔி ஏற்றிய ஆதவனை கருமேக கூட்டம் சூழ்ந்ததாய் ஓர் உணர்வு!!!வந்தவன் அசோக்கை புரியாமல் பார்த்தான்.அவன் பார்வையை உணர்ந்தவன் நொடியில் இயல்புக்கு வர போராடினான்.

"ஐ ஆம் அசோக்!சிவன்யாவோட ஃப்ரண்ட்!ஜெஸ்ட் அவங்களை இங்கே பார்த்தேன்.அதான் பேசலாம்னு வந்தேன்.ஸாரி!யூ கேரி ஆன்!"-என்று எழுந்தவனை தடுத்தான் சூர்யா.

"நோ ப்ராப்ளம் சார்!நீங்க இருங்க!நான் ஜெஸ்ட் சிவன்யாவை பார்க்க தான் வந்தேன்.பிகாஸ்,நான் உடனடியாக அமெரிக்கா கிளம்பணும்!பெண் பார்க்கும் போது என்னால வர முடியாது.அதான் இந்த ஏற்பாடு!நான் கிளம்புறேன்!நீங்க இருங்க!வரேன் சிவன்யா!ஸாரி இந்த பத்து நிமிடத்திற்காக உங்களை வர வைத்ததற்கு!"-என்று எழுந்தான் சூர்யா.

"சூர்யா ஒரு நிமிஷம்!"-பொறுமை இழந்தவளாய் அவனை தடுத்தவளை புரியாமல் பார்த்தனர் இருவரும்!!

"உங்கக்கிட்ட பேசணும்!"

"சொல்லுங்க!"

"ஸாரி சூர்யா!ஒருவேளை உங்களுக்கு என்னை பிடித்திருக்கலாம்!பட்,எனக்கு இது எதிலும் விருப்பமில்லை!"-அவள் பதிலில் ஆடிவிட்டனர் இருவரும்!!

"நான் வேற ஒருத்தரை விரும்புறேன்!நான் வந்ததுக்கு காரணமே உங்கக்கிட்ட இதை சொல்லணும் தான்!"-இது அடுத்த இடி அசோக்கிற்கு!!

"என்னை மன்னித்துவிடுங்க!என்னால உங்களை மேரேஜ் பண்ணிக்க முடியாது!"அவள் கண்கள் மெல்லியதாய் கலங்கின.

"ஏ...கம் ஆன் ! நானும் அம்மாக்கிட்ட கல்யாணம் இப்போ வேணாம்னு தான் சொல்லிட்டு இருந்தேன்.அவங்க கேட்கலை!ஒருவேளை நாம மேரேஜ் பண்ணி இருந்தாலும் நீங்க 2 வருஷத்துக்கு இங்கே தான் இருந்திருக்கணும்!நல்லவேளை மனசுக்குள்ளே வைத்துக்காம சொன்னீங்களே!இல்லைன்னா,நம்ம இரண்டு பேர் வாழ்க்கையும் ஸ்பாயில் ஆகி இருக்கும்!"-அவன் விளக்கத்தில் பிரம்மித்துப் போனாள் சிவன்யா.

"உங்களுக்கு...என் மேலே வருத்தம் இல்லையா?"

"ஐயோ!இதை நீங்க சொல்லாம இருந்தா தான் வருத்தமே!ஒரு உண்மையை சொல்லணும்னா,இப்போ வரும்போது தான் உங்க போட்டோவை கூட நான் பார்த்தேன்.எப்போதும் உண்மையான காதல் தோற்க கூடாதுங்க!வீட்டில் நான் பேசிக்கிறேன்!ஓ.கே.வா?கவலைப்படாதீங்க!"-மலர்ச்சியுடன் பதில் கூறி விடைப்பெற்றான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.