(Reading time: 16 - 31 minutes)

அவளை தனது மார்பில் அடக்கி அவளது உச்சியில் தனது தாடையைப் பதித்தான்.”நான் இன்னைக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா எனக்கு இன்னைக்கு வாழ்க்கையில மறக்க முடியாத நாள் எனக்கு என்னோட மாமா திரும்ப கிடைச்சிட்டாங்க..,ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி..”என்று அவன் கூற அவனது டி என்ற அழைப்பு அவளுக்கு மின்சாரம் தாக்கிய உணர்வை அவளுக்கு தந்தது.அவனது அந்த அழைப்பு அவளை உயிர் வரை தீண்டியது.அவன் இதுவரை அவளை இவ்வாறு உரிமையோடு அழைத்து இல்லை.

தன்னவனின் இந்த அழைப்பு அவளை ரசிக்க வைக்கத்தான் செய்தது      

aeom

“எத்தனை  தேடல் தேடி

எத்தனை தடவை யோசித்து

எனது பெற்றோர் எனக்கு

அளித்த பெயரை கூறி நீ

அழைத்தப் போதுக் கூட

அது எனக்கு இனிக்கவில்லை

ஆனால் என்னவன் உனது டி என்ற

அழைப்பு தந்த தித்திப்பிற்கு

இந்த உலகில் ஈடுஇணையான

இனிப்பு இல்லை...” 

அவனது அழைப்பில் அவள் லயித்திருக்க அஸ்வினே பேச ஆரம்பித்தான்,”எனக்கு என்னோட மாமானா ரொம்ப பிடிக்கும்..,அவரோட பிரிவுக்கு காரணமே உங்க குடும்பம் தான்...,அதனால தான் என்னோட அம்மாவும்,பாட்டியும் உன் மேல கோபமாக இருக்காங்க..,இனிமே அவங்களோட கோபம் குறைஞ்சிடும்..,எங்கம்மா உன்ன நல்லா பாத்துப்பாங்க...”என்றுக் கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு தங்களது படுக்கைக்கு சென்றான்.

எப்பொழுதும் போல அவளை தனது கைவளைவில் வைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

அவனது நெற்றி முத்ததிற்காக அவள் எப்பொழுதும் போல அவனைப் பார்க்க அவன் முத்தம் வைத்தான் அவளது நெற்றியில் அல்ல அவளது இதழில்...

“இது வரை நான் உணர்ந்ததில்லை

பனி எவ்வாறு உறையும் என்று

இதுவரை நான் அறிந்ததில்லை

கதிரவன் எவ்வாறு தகிப்பான் என்று

இதுவரை நான் நினைத்ததில்லை

நிலவு எவ்வாறு குளிர் காய்கிறது என்று

இதுவரை நான் யோசித்ததில்லை

கற்பூரம் எவ்வாறு கரையும் என்று

இதுவரை நான் பார்த்ததில்லை

பனிதுளி எவ்வாறு உருகும் என்று

இதை அனைத்தையும் அறிந்துக் கொண்டேன்

உன் முதல் இதழ்அணைப்பில்..”

அந்த முத்தம் சில நிமிடங்கள் நீடிக்க அவளது இதழை விடுதலை செய்தவன்,”சாரிடி உன்னோட படிப்பு முடியற வரைக்கும் உன்ன தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு நினைத்தேன் ஆனா இன்னைக்கி  இருந்த சந்தோசத்துல கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன்...”என்றுக் கூறி அவளுக்கு ஒரு நெற்றி முத்தமும் வழங்கியவன்..அவளை அனைத்துக் கொண்டே உறங்க ஆரம்பித்தான்..அவளும் தான் உறங்க ஆரம்பித்தாள் அவள்..

விக்கு செம் தொடங்க..,வீட்டில் அஸ்வினின் மாமாவின் வரவும் சேர்ந்துக் கொள்ள நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆரம்பித்தது...இதன் இடையே அஸ்வின் உடனான அவளது

வாழ்க்கையும் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது.

கவிஸ்ரீயும் நித்திப் போல அவளுக்கு ஒரு நல்லா சகோதிரியாய் இருந்தாள்..,சஞ்சீவ்வும் சதீஷைப் போல அவளை ஒரு தங்கையாய் தாங்கினான்..

இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் குறும்புகளை தாங்க முடியாமல் பெரியவர்கள் தான் திண்டாடினர்..

ஜனார்த்தனன் மட்டும் தனது மகனிடம் ஒரு ஒதுக்கத்தை காண்பித்தார்....எதற்காக..அது மற்றவர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் அதைப் பற்றி எதுவும் அவரிடம் கேட்கவில்லை..

தனது மகன் திரும்பி வந்ததால் தனது குல தெய்வ கோயிலுக்கு சென்று வணங்க வேண்டும் என்று நினைத்தார் பர்வதம்மாள். அதை அனைவரிடமும் கூறி அதற்கான ஏற்பாடும் செய்ய சொன்னார்.

அதன் படி அனைவரும் அவர்களது குல தெய்வ கோவிலுக்கு செல்ல தயாராயினர்.

அஸ்வினின் மாமா மலர் அனைவருக்கும் புது துணி மணிகள் வாங்கி தந்தார். பெண்கள் அனைவருக்கும் பட்டு சேலையும்..,ஆண்கள் அனைவருக்கும் வேஷ்டி சட்டையும் எடுத்து தந்தார்.

கவி அவரை சித்தப்பா என்று தான் அழைப்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.