(Reading time: 17 - 33 minutes)

“நடந்து முடிஞ்சதை பேசி பிரயோஜனம் இல்லை வினோ. இனி நாம என்ன செய்யனும்னு யோசிக்கனும்.”

“என்ன செய்யனும்? முகிலுக்கு வர்றது கனவு மாதிரி தெரியலை. ஏதோ அவன் வாழ்க்கையில் நடந்ததாதான் இருக்கனும். அதனால்தான் அவன் ஒருவருடம் நம்மகிட்ட தொடர்பில் இல்லாம இருந்திருக்கான். அதை என்னன்னு கண்டுபிடிக்கனும்.”

“இந்த அலுவலகத்திலும் கொ      ஞ்சம் துப்பறியனும்னு நித்தி சொன்னா. வினோத் அதை நீ பார்த்துக்கோ. அப்புறம் நீ ஸ்ருதியைப் பார்க்கப் போறேன்னு சொன்னியாம். போய் அவகிட்டயிருந்து எதையாவது கறக்க முடியுமான்னு பாரு.”

“எங்க ரெண்டு பேரையும் அதைப்பார் இதைப்பார்னு சொல்லிட்டு நீ என்ன செய்யப்போறியாம்?”

வினோத் கேட்டான்.

“நான் போய் என் பொண்டாட்டியை பார்க்கப்போறேன்டா.”

“ஆமா! தங்கச்சி இருக்கிற நிலைமையில் நீ கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

கொஞ்சம் அவருக்கு மன ஆறுதலாய் இருக்கும்.”

அவன் சொல்ல வருவது புரிய திகைப்புடன் அவனைப்பார்த்தாள்.

அவனின் கம்பீரம் எப்போதுமே அவளை ஈர்க்கும். அத்துடன் அவனது சொத்தும் வெளிநாட்டு வேலையும்.

ஆனால் அவன் நிரந்தரமாக வெளிநாட்டில் இருக்கப்போவதில்லை என்று தெரிந்த பிறகு சப்பென்றானது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.