அவள் ஏறியதும், காரை கிளப்பியவன், வரும் வழியெல்லாம், அவள் நைனியோடு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே வந்தான் கண்ணாடியில்… அவன் கண்ணாடியில் கவனிப்பதை அவளும் அறிந்தே தான் வைத்திருந்தாள்… எனினும் அவன் பக்கம் அவள் தன் பார்வையை சிறுதும் செலுத்திடவில்லை…
அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளின் கடைக்கண் பார்வையினைக் கூட அவனால் வாங்கிடமுடியவில்லை அந்த பயணத்தில்…
வீடு வந்த்தும், அவள் தன் பையினை வேகமாய் எடுக்க முயல, இம்முறையும் அவன் அதனை விட்டுக்கொடுத்திடவில்லை…
முறைத்துக்கொண்டாவது அவள் பார்த்திடுவாள் என்றெண்ணியிருந்தவனுக்கு வெறும் ஏமாற்றங்களே மிஞ்சிட,
நைனியோடு அவள் உள்ளே நுழைய போகையில், “அங்கேயே நில்லு…” என்ற குரலில் அடி எடுத்து வைத்த காலை அப்படியே கீழே வைத்தாள் சந்தா…
ப்ரசன் அதிர்ச்சியோடு பார்த்திட, நைனியோ புரியாமல் நின்றாள் இருவரையும் பார்த்தபடி…
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}