(Reading time: 11 - 21 minutes)

22. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

காலை சூரியன் மூஞ்சில் சுள் என்று அடிக்க விழித்தான் அஸ்வின்.இன்னுமும் உறங்கிக் கொண்டிருந்தாள் கவி.பல நாட்களுக்கு பிறகு தூங்கி இருந்தால் அதனால் அவளுக்கு எழ மனது வரவில்லை..தன்னவனை இன்னும் ஒண்டிக் கொண்டு படுத்தாள்...அவளை தன்னுடன் இன்னும் சேர்த்து அணைத்து இறுக்கினான்.

அவனது இறுகிய அணைப்பை தாங்காதவள் “அஷு மாமா..,வலிக்குது...”என்றுக் கூற அவளது அஷு என்ற அழைப்பில் இன்னும் அவனது நிலை மோசமாகியது...

“ஏய் மாமாவ சும்மா சும்மா உசுப்பேத்தாத...,அப்பறம் நான் எதுக்கும் பொறுப்பில்லை..”என்று அவன் கூற,“பேசாம தூங்கு மாமா..”என்று அவள் கூற

“ஏய் நல்லா விடிஞ்சிடுச்சு ஒழுங்கா எழுந்துறு...,கீழ எல்லாரும் தேட போறாங்க...”என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அவனது மொபைல் போன் சிணுங்க ஆரம்பித்தது

அதில் அழைப்பை பார்த்தவன்,

”பார்த்தியா..,நான் சொன்னேன் இல்ல...உங்க அப்பா தான் இப்ப கூப்பிடுறாரு..,பொண்ணு மேல எவ்வளவு அக்கறை...” என்று சொன்ன உடனேயே அவனை விட்டு விலகி அவன் சுதாரிப்பதற்கு முன்பே குளியலறையில் நுழைந்து விட்டாள்.

அவளை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டவன்..,விருந்தினர் அறைக்கு சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு தனது அறைக்கு அவன் திரும்ப வரும் பொழுது கவி குளித்துவிட்டு ரெடியாக நின்றாள்.

அறை திறந்ததும் திரும்பி பார்த்தவள் அங்கு அஸ்வின் வருவதைப் பார்த்தவள் இவன் கிட்டக்க வரதுகுள்ள நாம இந்த ரூம விட்டு போணும்னு நினைச்சேன்..இவன் கிடக்க வந்தாலே நம்மள மயக்கிடுறான் இவன் கிட்ட சொன்னாலும் கேட்க மாட்டாங்குறான்...

என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளது அருகில் வந்தவன் “என்ன கவிம்மா..,இப்படி பாக்குற மாமாவ..,இப்படி எல்லாம் பாக்காத அப்புறம் நான் என்ன செய்யவேனு எனக்கே தெரியாது..,”என்றுக் கூறிக் கொண்டே அவளை அவன் நெருகினான்.

அவன் தன்னை ஒவ்வொரு அடியாக நெருங்க நெருங்க அவள் ஒவ்வொரு அடியாக பின் சென்றாள்.கபோர்ட்டில் மோதி அவள் நிற்க அவனுக்கும் அவளுக்குமான இடைவெளி குறைந்துக் கொண்டே வந்தது..,அவனது சூடான மூச்சுக் காற்று அவளது கன்னங்களை உரச கண் மூடி தலைகுனிந்தாள் அவள்.

அவளது நாடியை பிடித்து அவளது தலையை அவன் நிமிர்த்த கண் மூடி இருந்தால் அவள், தலை குளித்திருந்தவளின் ஒன்று இரண்டு முடிகள் நீர் சொட்ட அவள் முகத்தை மறைக்க,

அதை ஒதுக்கி விட்டவன் அவள் கன்னங்களில் தனது விரலால் கோலமிட தன் வசம் முழுவதும் இழந்து நின்றாள் அவள்.

அவளது அந்த நிலையை பார்த்தவனது இதய துடிப்பு தான் வேகமாக ஏகிறியது..

அங்கு மேலும் நின்றால் தன்னிலை தான் இழந்து விடுவோம் என்று நினைத்தவன்...,தனது டவலை எடுத்துக் கொண்டு குளியறையில் புகுந்துக் கொண்டான்.

அவனது அருகாமையில் அது வரை தனது நினைவை இழந்து நின்றவள் மீண்டும் சுயம் பெற்று பார்த்தபொழுது அவன் அவளில் எதிரில் இல்லை.ஒரு நிமிடம் கனவோ என்று குழம்பியவள் குளியறையில் கேட்ட நீர் சத்தத்தில் அது உண்மை என்று உணர்ந்துக் கொண்டவள்..ஒரு சிறு புன்னகையுடன் தனது ஈர முடியை ஒரு கிளிப்பில் அடக்கியவள்.., கிளம்பி கீழே சென்றாள்.

கீழே அவளது குடும்பம் முழுவதும்  ஹாலில் கூடியிருந்தது.என்ன என்று மேலே இருந்து யோசித்துக் கொண்டு சென்றவளுக்கு சீக்கிரம் விடை கிடைத்தது.

அங்கே யாழினியின் குடும்பமும்,அனன்யாவின் குடும்பமும் வந்திருந்தது.அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது விஷ்வாவிற்கும் திருமணம் நடக்க போகிறது என்று...

அந்த வீட்டில் இப்பொழுது ஒரு பெரிய திருவிழாவே நடக்க போகிறது என்று அவள் புரிந்துக் கொண்டாள்..

ஜோடி யார் யாருனு சொல்லலை இல்ல

ஆகாஷ் — நித்தில்லா

சஞ்சீவ் — காவ்யா

சதீஷ் — அனன்யா

விஷ்வா— யாமினி

இவங்களோட அமர்- மித்ராவுக்கும் கல்யாண வைபோகம்....

அங்கு வந்திருந்த யாமினி மற்றும் அனன்யாவின் அன்னை தந்தையை பார்த்தவள் அவர்களை நலம் விசாரித்து அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அனன்யாவுடனும் பேசிவிட்டு இருந்தாள்.அப்பொழுது அங்கே யாமினியும் அவர்களுடன் இணைந்துக் கொண்டாள்அவளிடம் பேசினாலும் ஒரு ஒதுக்கதை அவள் உணர்ந்தாள் யாமினி ஆனால் அவளால் எல்லார் முன்னிலையிலும் எதையும் கேட்க அவளால்  முடியவில்லை...

அனைவருக்கும் கவி இயல்பாக பேசுவது போல தான் தோன்றும் அதில் இருந்த சிறிய ஒதுக்கம் அனன்யா,யாமினி,விஷ்வா மூவருக்கும் அது தெரிந்தது.குளித்துவிட்டு கீழே வந்தவன் கண்களில் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்த கவி தான் தென்பட்டாள்.

அவளை பார்த்தவனது கண்களில் ஒரு அமைதி,ஆனந்தம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.