(Reading time: 11 - 21 minutes)

அவளிடமிருந்து கண்களை திருப்பியவனது கண்களில் தென்பட்டது கவியை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா தான்..சதீஷ் அவனது ஆளை சைட் அடிப்பதிலே மூழ்கியிருந்தான்...

அவனது அருகில் சென்ற அஸ்வின் அவனது தோள்களில் கைப் போட்டு அவனை அங்கிருந்து அழைத்து சென்றான்.

“என்னடா விஷ்வா என்னோட ஆள அப்படி முறைக்க பாக்குற...,என்ன மேட்டர் இன்னும் வார் முடியலையா...”என்றுக் கேட்க

“எங்க அண்ணா அவ என்ன கண்டுக்கவே மாட்டங்குற...,அவ என் மேல பயங்குற கோபத்துல இருக்கா...,அவளுக்கு அவங்க அம்மாவை பத்தி தப்பா பேசினா புடிக்காது..,எனக்கு தெரிஞ்சும் நான் அப்படி நடந்துகிட்டேன்..,என் அன்னைக்கி அப்படி பிஹேவ் பண்ணணு தெரில...”என்று அவன் கூற

“விடு விஷ்வா அவ சரி ஆகிவிடுவா..,நீ வேணா பாரேன் அவ இந்த வீட்ட விட்டு போக மாட்டேன்னு...,இங்கதான் இருக்க போற..”என்றுக் கூறினான் ஆகாஷ் ஆனால் அவனுக்கு தெரியவில்லை கவி இருக்க நினைப்பாள் ஆனால் இவன் தான் போக சொல்ல போகிறான் என்று..

எப்படியோ விஷ்வாவை சமாதானப் படுத்தி வந்தான்..,இன்னும் பெரியவர்களது பேச்சு வார்த்தை இன்னும் முடிந்த பாடில்லை...

அவர்கள் நிச்சயம் பண்ண நாள் குறிக்க ஆரம்பித்தனர்.அதற்கு ஜவுளி எடுப்பதற்கு  போக வேண்டும்  என்று நினைத்தனர்.

பல வருடங்கள் கழித்து இரு குடும்பமும் இணைத்து நடக்கும் நல்ல விஷயம் என்பதால் அதை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்தனர்.

அதனால் அதை மிகவும் பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்தனர்..

அனைவரும் பேசி இரண்டு நாள் கழித்து  எடுக்க போகலாம் என்று முடிவு எடுத்தனர்.

மித்ரா,அமர் அவர்கள் குடும்பத்தையும் வர சொல்லி இருந்தனர்..

கவி மித்ரா அம்மா,அப்பாவின் மீது வைத்துள்ள பாசத்தை புரிந்துக் கொண்டவர்கள் அவர்களையும் தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களது  திருமணத்தையும்  இங்கே நடந்தவேண்டும் என்றுக் கூற அவர்களது அன்பை புரிந்துக் கொண்டவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டனர்...

மதிய உணவை முடித்துவிட்டு பெரியவர்கள் அனைவரும் தங்களது இளமை கால விஷயங்களை பேசிக் கொண்டிருக்க திருமணமாக போகும் ஜோடிகளோ பெரியவர்களுக்கு தெரியாமல் சந்திக்கிறோம் என்று நினைத்து  தங்களது துணைகளுடன் காதல் புரிந்துக் கொண்டிருந்தனர்..

பெரியவர்களுக்கு அது தெரிந்தாலும் அதை கண்டுக்கொள்ளவில்லை..பர்வதம்மாள்லே அதை கண்டுக் கொள்ளவில்லை என்றால் பாருங்கள்..வீடே சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது..பல வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்தின் சந்தோசத்தை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் அதை ரசிக்க ஆரம்பித்தார்..

அனைவரும் தனது ஜோடிகளுடன் கடலை போட சென்று விட கவியுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த கவிஸ்ரீயும் சிறிது நேரத்தில் உறங்க சென்றுவிட...,என்ன செய்வது என்று யோசித்த கவி தனது அறைக்கு செல்ல அவள்அறையை திறந்துக் கொண்டு உள்ளே நுழையவும் அவளை அஸ்வின் பின்னிருந்து அணைக்கவும் சரியாக இருந்தது...

அவனது இந்த திடிர் தாக்கத்தில் பயந்தவள் பின்பு அவனிடமிருந்து திமிற ஆரம்பித்தாள் அவளது தாக்குதலை எல்லாம் சமாளித்தவன் அவளது இடையில் கைக் கொடுத்து தூக்கினான் அவளது வெற்றிடையில் அவனது கைகள் பதிய அவனது கை தந்த அழுத்தத்தில் அவளது இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது..எதுக்கு இவன் இன்னைக்கி இப்படி பண்றான் அவள் யோசிக்க,அவன் கட்டிலை நோக்கி முன்னேற அவனது ஒவ்வொரு அடிக்கும் இவளது இதயதுடிப்பு இன்னும் எகிற  ஆரம்பித்தது..,அவனை உணர்ந்துக் கொண்டவனது உதடுகளிலோ ஒரு வித கேலிபுன்னகை அரும்பியது..

அவளை கட்டிலில் கிடத்தி அவளது வலப்பக்கம் படுத்தவன் அவள்புறம் திரும்பி அவளது முன்முடியை ஒதுக்கியவன் அவளது கன்னத்தில் தனது சூடான மூச்சுக் காற்று படுமாறு அவளது காதோரம் சென்றான்.

அவனது ஒவ்வொரு செயலிலும் பெண்அவளது மனம் தான் மயங்க ஆரம்பித்தது..

“கவிம்மா..,இந்த ஒரு தடவை மட்டும்டா இது மாதிரி நான் பீல் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுடா,இவனோ வேற ஜோடி ஜோடியா சுத்தி என்ன .............

கவி சாரிடா உன்னோட அனுமதி இல்லாம இப்படி நடந்துக்குறது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனா நானும் பாவம் தான மாமா அதுக்கு சாரி கேட்டுக்குரேன் டீ..., நாளைக்கு கல்யாணம் பண்ண போறவன் எல்லாம் என்ன உசுபேத்துறான் சாரி டீ மிளகா என்று குறியவனது வலது கை அவளது வெற்றிடையை அழுத்தியது அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்று தெரியாமல் பெண் அவள் மனமோ எதிர் பார்க்க ஆரம்பித்தது. அவளது நெற்றியில் தனது இதழை பதித்தவன். கன்னம்,காது என்று தனது முத்த ஊர்வலத்தை நடத்தியவன் அவள் இதழில் வந்து இளைப்பாறினான்.தன் இதழுடன் அவனது இதழ் சேர்ந்த நொடி அவளது விழிகள் அகல விரிந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.