(Reading time: 7 - 14 minutes)

அவளின் அருகில் சென்று, “ஹே காவீ... எப்படி அவ்வளோ ஷாட்ஸ் அடிச்சும் அசராம அச்சால்டா நேரா நடக்கற... இதோட போதையே உனக்கு போதலையா... அய்யய்யோ....!! அட ராமா.. என்னை ஒரு குடிகாரி கையில சிக்க வெச்சிடுவ போலவே...!! ஹோட்டல் இண்டஸ்ட்ரீல இருக்கற நானே  டகீலா ட்ரை பண்ணதில்ல... நீ என்னம்மா கப்பு கப்புன்னு அடிக்கற... ஒ மை காட்...!!” என்று மூச்சு விடாமல் புலம்பி முடிக்க...

அவனின் திடீரென்ற அருகமையில் பயந்து துள்ளிய காவ்யா, பின் அவனின் இடைவிடாத லொட லொட பேச்சில் காதுகளை பொத்திக்கொள்ள... அதையும் மீறி காதில் விழுந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் அதிர்ந்து, அரண்டு பின் பயங்கரமான கடுப்புடன் ஒரு எக்கு எக்கி உதய்யின் நடு மண்டையில் ஒரு குட்டு வைத்தாள்.!!!

பின் ஆத்திரமாக... “டேய்... யாருடா நீ... இந்தப் பேச்சு பேசற... ஐயோ... காதுல கொய்ங்..கிது. லொட லொட்ட... என் பேரை வேற கண்டு பிடிச்சிட்டியா..?! அதோட நீ யாருடா என் விஷயத்துல மூக்க நுழைக்கற... நான் டகீலா அடிச்சா உனக்கென்ன.. ஜின் அடிச்சா உனக்கென்ன.. தேவையில்லாம பேசற... நான்-அல்கஹாளிக் (non-alcoholic) செக்க்ஷன்ல வந்து நின்னுட்டு உளற வேண்டியது... ஓடி போய்டு.. பக்கி... ஆளு பார்க்க டீஸன்ட்டா இருந்தா போதுமா... மூளைய யூஸ் பண்ணனும்.. ஜின்ஜெர்-லமனேட் இவருக்கு டகீலாவம்... இதுல ஹோட்டல் இண்டஸ்ட்ரி வேற... கொடுமை.. ஸ்டுபிட்.. ஹே ஹே... அதோட வேற ஏதோ டயலாக் வேற சொன்னியே... ‘குடிகாரி’ ‘கையில’ அப்படின்னு... மவனே.. இன்னுரு முறை என் கண்ணுல பட்ட.... நீ காலி... “என்று காளி அவதாரம் எடுத்து மூச்சு விடாமல் பேசி ஓய்ந்து, இப்பொழுது மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.. காவ்யா என்னும் காவ்ய மகேஸ்வரி...!

குட்டு வாங்கிய மண்டையை தடவிக்கொண்டே இப்பொழுது நிதானமாக சுற்றுபுறத்தை ஆராய்ந்த உதய்க்கு நன்றாக விளங்கியது, தான் ஆர்வக்கோளாறு காரணமாக செய்த செயல்... அசடு வழியும் பாவத்துடன் திரும்பி காவ்யாவை பார்க்க, அவள் அங்கு இருந்தால் தானே...!!

லித்துக்கொண்டிருந்த இசையின் காரணமாக சற்று வெளியில் பால்கனி போல அமைந்திருந்த இடத்திற்கு சென்று போன் பேசிவிட்டு வைத்த ககனின் மனதை, அங்கிருந்த அமைதியான சூழல் ஈர்த்தது. காற்றோற்றமாக புள்வெளியில் அங்கங்கு சோபாக்கள் போட்டு வைத்திருந்தார்கள்... அதில் ஒன்றில் அமர்ந்து உதய்யை அங்கு வரசொல்லி போன் செய்தான். உதய் வருவதற்குள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்து அவன் செவியில் விழுந்த விஷயத்தால் அவனின் மனதும்.. ககன் அழைத்ததால் அங்கு வந்த உதய்யின் மனதும் பட படவென்று துடிக்க ஆரம்பித்தது... சந்தோஷமான ஆர்ச்சர்யத்தில்.   

“ஹே... வர வர நம்ப ஊர் பசங்களுக்கு கொழுப்பு ரொம்ப அதிகமா ஆய்டுச்சு தாரா... அன்னிக்கு என்னன்னா உன்கிட்ட சிக்னல்ல ஒருத்தன் லந்து பண்ணிட்டு போனான்... நீயும் என்னவோ அவன் உன்னை புகழ்ந்து பாராட்டி பாடின மாதிரி அவனையே இன்னும் நினைச்சிட்டு, இங்க பார்ப்போமா அங்க பார்ப்போமான்னு தேடிட்டு இருக்க... இன்னிக்கு என்கிட்டே ஒரு லூசு  லொள்ளு பண்ணுது... உன்னை மாதிரியே நானும் அவன்கிட்ட கவுந்துடுவேனா...?!! நோ..............வே..!!!!”

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1151}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.